districts

img

அமைச்சரே ஆனாலும் உங்கள் வீட்டு செல்ல பிள்ளை என்பதே பெருமை

கோவை, டிச. 25- அமைச்சர் உள்ளிட்ட எந்த பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டாலும், நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகத்தான் இருக்க விரும்புகிறேன் என கோவை நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சராக பதவி யேற்ற பின்னர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதன் முறையாக கோவைக்கு வந்தார். கோவை நேரு விளை யாட்டு அரங்கத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பி லான செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்க உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் செயல்படுத் தப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகா ரிகளிடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 இதனைத் தொடர்ந்து அவினாசி சாலை யில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பங்கேற்று, 368 கோடி ருபாய் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங் கினார்.  இதனைத்தொடர்ந்து, பேசிய உதயநிதி ஸ்டாலின், தென்னிந்தியாவின் மான்ஸ்செ ஸ்டரான கோவை கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கு கிறது. உழைப்பால் சென்னைக்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. எத்தனையோ முறை கோவைக்கு வந்திருக்கிறேன். முதன் முதலாக ஒரு அமைச்சராக பொறுப்பேற்று முதல் சுற்றுப்பயணத்தில் கோவைக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. கிறிஸ்து மஸ் தினம் என்பதால் அனைவருக்கும் கிறிஸ் துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு நாட்கள் அவகா சத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜியால் தான் முடி யும். நலத்திட்ட மாநாடு போல நடத்தி காட்டி யுள்ளார். இந்த விழாவில் 22 ஆயிரம் பேருக்கு 368 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. செயலற்ற அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளுக்கும் சேர்த்து பணியாற்ற செந் தில் பாலாஜியை முதலமைச்சர் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளார். கோவையையும், கரூரையும் தனது இரண்டு கண்களாக செந்தில் பாலாஜி பார்க்கிறார்.  கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு  திமுக எம்எல்ஏ கூட இல்லை, கோவை புறக்க ணிக்கப்படும் என சொன்னதை பொய் என தமிழக முதல்வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நிரூபித்துள்ளனர். அதிக நலத் திட்டம் பெற்ற மாவட்டமாக கோவை உள் ளது. அதுவும் இந்த நலத்திட்ட உதவிகள் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழங்கப் பட்டு வருகிறது.

அதிமுகவினராக இருந்தா லும், இனைய தளங்களில், பொய் செய்தியை பரப்புவதே கொள்கையாக கொண்ட பாஜக வினராக இருந்தாலும், அவர்களின் நலனை யும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்ப டுகிறது என்றார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு துறை சார்ந்து எப்போதும் வேண்டுமா னாலும் கோரிக்கைகளை நீங்கள் கேட்க லாம். அதை நிறைவேற்றி தர தயாராக இருக் கிறேன். கலைஞரின் பேரன், முதலமைச் சரின் மகன், இளைஞரணி தலைவர், மாண்பு மிகு அமைச்சர் என எவ்வளவோ பெரு மைகள் இருந்தாலும், உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருக்க விரும்பு கிறேன். அமைச்சராக பொறுப்பேற்ற நிலை யில், பொறுப்பான செல்லப்பிள்ளையாக கடைசி வரை நடந்து கொள்வேன் என் றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற இந்நிகழ்வுகளில், மின்சாரத்துறை அமைச் சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணை யாளர் பிரதாப், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங் கேற்றனர்.  முன்னதாக, கோவைக்கு முதன்மு றையாக வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர் கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற் பளித்தனர்.