districts

108 வயதிலும் வாக்கு செலுத்த ஆர்வம் குறையாத பாட்டி

மே.பாளையம், ஏப்.19- மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 108 வயது பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி, தள்ளாத வய திலும் ஆர்வம் குறையாமல் தனது ஜன நாயக கடமையை ஆற்றினார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் பகுதி கிராமப்புறங்களில் காலை 7 மணி முதல்  விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏராள மானவர்கள் வரிசையில் காத்திருந்து தனது வாக்குகளை பதிவு செய்தனர்.  மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி வசித்து வருகிறார். இவர் தனது  சமூக பணிக்காக ஒன்றிய அரசின் பத்மஶ்ரீ விருது பெற்றவர். இவர் நாடு  சுதந்திரம் பெற்று நடைபெற்ற தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப் பதிவு நாளன்று  தவறாமல் தனது ஓட்டை பதிவு செய்து வருகிறார். தற்போது 108 வயதை தொடும் பாப் பம்மாள் பாட்டி, வெள்ளியன்று நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனது வாக்கை செலுத்தினார். தேக் கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு நேரில் வந்த அவர், தனது வாக்கினை செலுத்தினார். தள்ளாத வயதிலும் தனது முதுமையை கார ணம் காட்டி வாக்களிப்பதை தவிர்க்கா மல், பாப்பம்மாள் பாட்டி வாக்களித் தது வாக்களிப்பதன் அவசியத்தை விளக்குவதாக அமைந்தது.