districts

ரூ.3.20 கோடியில் எட்டின்ஸ் சாலை விரிவாக்கம்

உதகை, மே 18- ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரூ.3.20 கோடியில் எட்டின்ஸ் சாலையை விரிவாக்கம் செய்ய திட்ட மிடப்பட்டு உள்ளது. உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு  லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதே போல் வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் பேரும், வார விடு முறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் உதகைக்கு சுற்றுலா வந்து  செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது கோடை சீசனையொட்டி தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல் கின்றனர். இதனால் நகரில் சேரிங்கிராஸ், ஏடிசி, பேருந்து நிலையம், மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதன் காரணமாக சீசன் காலங் களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்படுகிறது. உதகை பேருந்து நிலையத்திலிருந்து ஏடிசி வழியாக சேரிங்கிராஸ் பகுதிக்கு எட்டின்ஸ் சாலை செல்கிறது. இவ் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற வாக னங்கள் சென்று வருகின்றன. சீசன் காலங்களில் எட்டின்ஸ்  சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாக னங்களில் ரோஜா பூங்காவுக்கு சென்று வருகின்றனர். இத னால் உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை  தடுக்க சாலைகளை அகலப்படுத்த பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எட்டின்ஸ்  சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உதகை  நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகை யில், எட்டின்ஸ் சாலையை  அகலப்படுத்த திட்டமிடப் பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. கோடை சீசன் முடிந்த பின்னர், ரூ.3.20 கோடி செலவில் விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். இருபுறமும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, பாத சாரிகள் நடந்து செல்லும்  வகையில் கைப்பிடியுடன் நடைபாதை அமைக்கப் படும். இதன் மூலம் போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் குறையும் என்பதால் மக்கள் அச்ச மின்றி பயணிக்கலாம், என்ற னர்.