திருப்பூர், அக். 6 - திருப்பூர் தொழிலாளர்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையான இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வரு கிறது. எப்போது இந்த மருத்துவமனை தொழிலாளர் குடும்பங்களின் பயன் பாட்டுக்கு வரும் என்று தொழிலாளர் கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக பின்னலாடைத் தொழில் உள்ளது. இந்த தொழில் மட்டுமின்றி இதன் சார்புத் தொழில்களையும் நம்பி இங்கு 8 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டு மின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்டுதோ றும் கோடிக்கணக்கில் இஎஸ்ஐ சந்தா தொகை திருப்பூர் மாவட்டத்தில் வசூலா கிறது. எனினும் நீண்ட காலமாக இங்கு இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை. இ.எஸ்.ஐ. மருத்துவமனை இல்லாத தால் அவசர சிகிச்சை மற்றும் உயர்சிகிச் சைக்காக தொழிலாளர்கள் கோவை மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதி யுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று தொழிற் சங்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்ள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த னர். குறிப்பாக சிஐடியு சங்கம் மாவட்ட மாநாடுகளில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி தில்லியில் உள்ள இஎஸ்ஐ கழகத்திற்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கை கடிதம் அனுப்பியதுடன், தொழிலாளர்களைத் திரட்டி இயக்க மும் நடத்தியது. பல்வேறு தொழிற்சங் கங்களும் கோரிக்கை விடுத்து வந் தன. ஒருவழியாக கடந்த 2012ஆம் ஆண்டு திருப்பூர் பூலுவப்பட்டி பூண்டி சுற்றுச் சாலையில் இ.எஸ்.ஐ. மருத்து வமனை கட்ட இந்து அறநிலையத் துறை யிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட் டது. நீதிமன்ற வழக்கு காரணமாக மருத் துவமனை கட்டும் பணி கிடப்பில் போடப் பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத் ரேயா அறிவித்தார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவ தற்கு பெருமாநல்லூர் பகுதிக்கு வந்து அடிக்கல் நாட்டினார். ஆனாலும் மருத் துவமனை கட்டுமானப் பணி தொடங்கு வது தாமதம் ஆனது. இது தொழிலாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81.34 கோடி மதிப்பில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டும் பணி தொடங் கப்பட்டது. அரசுத்தரப்பில் உதவி பொறி யாளர் ஒருவரும். மத்திய பொதுப் பணித்துறையிடம் ஒப்பந்தம் பெற்ற டெல்லியை சேர்ந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் 10 பேர் உட்பட 400க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டு மான பணியை மேற்கொண்டு வருகிறன் றனர். மூன்று தளங்களில், 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் தங்கும் வகையில் 32 குடியிருப்புகள், தார் சாலை, குடிநீர், உணவகம் கழிவுநீர் சுத் திகரிப்பு மையம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டது, எனினும் அதற்குப் பிறகும் ஆறு மாத காலம் கடந்துவிட் டது. இந்நிலையில் மருத்துவமனை கட்டி முடிக்க டிசம்பர் மாதம் ஆகும் என இஎஸ்ஐ வட்டாரத்தினர் தெரி விக்கின்றனர். இதுகுறித்து சிஐடியு பனியன் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத் கூறுகை யில், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவ மனை கட்டுவது என்பது 25 ஆண்டு கால கோரிக்கை. 2004 முதல் 2006 வரை சந்திர சேகர ராவ் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக இருந்தபோது திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்து வனை அமைக்கப்படும் என்று திருப்பூ ரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டதில் தெரிவித்தார். ஆனால், மருத்து வமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாத நிலையில் சிஐடியு உட்பட பல்வேறு தொழிற்சங்கள் சார் பில் பல்வேறு இயக்கங்கள் நடத்தப் பட்டது. அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு இடதுசாரிகள் சட்டமன்றத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தினர். இதைய டுத்து எம்.எஸ்.எம்.ஆனந்தன் இந்து அற நிலையத் துறை அமைச்சராக இருந்தபோது முதல் முறையாக இஎஸ்ஐ மருத்துவனை கட்ட 2012ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு நீதிமன்ற வழக்கு என்று கட்டு மானப் பணி தொடங்கப்படாமல் நின்று போனது. இஎஸ்ஐ மருத்துமனை கட்டு வது என்பது ஒட்டுமொத்தமாக திருப்பூ ரில் வாழும் மக்களின் தேவையாக மாறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட் டது. இதையடுத்து 2019ஆம் ஆண்டு திருப்பூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மோடி மீண்டும் அடிக்கல் நாட்டு வது போல் நாடகம் நடத்தினார். அரசு நிதி ஒதுக்க எந்த தேவையும் இல்லாத நிலையில் தொழிலாளர்களின் பங்க ளிப்பில் இஎஸ்ஐ மருத்துமனை கட்டுவ தற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகி றது? விரைவாக இந்த பணியை முடிக்க வேண்டும். இந்த மருத்துமனை பயன்பா டிற்கு வரும்பட்சத்தில் 3.5 லட்சம் தொழி லாளர்களின் குடும்பங்கள் பயன்பெ றுவார்கள் என்று தெரிவித்தார். -லிவின்