கோயம்புத்தூர், மார்ச் 28- மதிமுக மூத்த தலைவரும், ஈரோடு மக்களவை உறுப்பினரு மான அ.கணேசமூர்த்தி காலமா னார். அவருக்கு வயது 76.
மார்ச் 24 அன்று விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்ட தாக தனது குடும்பத்தினரிடம் கணே சமூர்த்தி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கணேசமூர்த்திக்கு ஈரோடு பெருந் துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு கணேசமூர்த்தியை பரி சோதித்த மருத்துவர்கள் 72 மணி சிகிச்சைக்கு பிறகுதான் உடல்நலம் குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வியாழனன்று அதிகாலை 5:15 மணியளவில் அ. கணேசமூர்த்தி எம்.பி. சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர், மதிமுக தொண்டர் களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, 3 முறை எம்.பி., ஒரு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2002-இல் பொடாவில் கைது செய்யப்பட்டு 555 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டார். அ.கணேசமூர்த்தி மறை வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள் ளார். “கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை - மதிமுக கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன். அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண் பர்களுக்கும்,ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறு வனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக தலைவர் அண்ணாமலை, மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலை வர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர்.