அரசாணை 152 ஐ ரத்து செய்க
ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ. 11- அரசணை 152ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் வியாழனன்று ஈரோடு மாநக ராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங் களின் கூட்டமைப்பு தலைவா் வி.ராதாகிருஷ்ணன் ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். முன்னதாக சங்கங் களின் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வ ராஜ், மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமார் ஆகியோரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ள அரசாணை எண்.152 காரணமாக தமிழ கத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகைப் பணியிடங்கள் நீக்கப்படும். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் 3,417 பணியிடங்களாக குறைக்கப்படும். இந்த அரசா ணையை அமல்படுத்தினால் மக்களுக்களின் அன்றாட சேவைகளான குடிநீா் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். மேலும், தற்போது இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவ லர்கள், ஊழியா்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக் கப்படும். எனவே, அரசாணை 152ஐ ரத்து செய்திட அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று அரசாணை 152ஐ திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.
குரூப் 1 இலவச மாதிரி தேர்வு
கோவை, நவ.11- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் டிஎன்பிஎஸ்சி-1 தேர்விற்கு, இலவச மாதிரி தேர்வு நடை பெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிக் கையில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கான மாதிரி இலவச தேர்வு நவ.13 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் நடத்தப்படவுள்ளது. இம்மாதிரி தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறு கிறது. மேலும், 1 மணி முதல் 2 மணி வரை இம்மாதிரி தேர்வுக் கான மதிப்பாய்வு நடைபெற்று மதிப்பெண் உடனடியாக வழங்கப்படும். இந்த மாதிரி தேர்வை எழுத விரும்புவர்கள் studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 நுழைவு சீட்டை அனுப்ப வேண்டும். மேலும் நுழைவு சீட்டை கொண்டு வருபவர் களுக்கு மட்டுமே மாதிரி தேர்வு எழுத அனுமதி வழங்கப் படும். இம்மாதிரி தேர்வு முற்றிலும் இலவசமானதாகும். இத்தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் (அஞ்சல்), கவுண்டம்பாளையம், கோவையில் நடைபெறுகிறது. எனவே, அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று லோக் அதாலத்
கோவை, நவ.11- தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்டத்தில் சனி யன்று (இன்று) நடைபெறு கிறது. இந்த மக்கள் நீதி மன்றமானது கோவை மாவட்டத்தில் உள்ள நீதி மன்றங்களில் நடக்கிறது. இதில் நிலுவையிலுள்ள, சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், சிவில் வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணும் வகை யில் பல்வேறு அமர்வுகளாக நடக்கிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி கொள் ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
உள்ளூர் இலக்கியம், நாள்தோறும் கருத்தரங்கம்
சேலம் புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சேலம், நவ.11- சேலத்தில் புத்தக திரு விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. இதில், உள்ளூர் இலக்கியம் குறித்த வரி சைப்படுத்துதால், நாள் தோறும் கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக் கப்பட்டுள்ளது. சேலம் புத்தகத் திரு விழா நடைபெறுவது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை யில் நடைபெற்றது. இதுகுறித்து, ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் ்தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதி கரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக் கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு புத்தக திரு விழாவை நடத்தி வருகிறது. புதிய நூலகங்கள் அமைத் தல், அனைத்து மாவட்டங் களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல் வேறு நடவக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா-2022 வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30ஆம் தேதி வரை சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும், மாண வர்களுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர் களின் படைப்புகளைக் கொண்ட விற்பனைய கங்கள் அமைத்திடவும், தொல்லியல் துறையின் மூலம் வரலாற்றுச் சிறப்பு டைய கல்வெட்டுகள், சிலைகள், நாணயங்கள் மற்றும் அரிய வகை புத்த கங்கள் உள்ளிட்டவை காட்சிப் படுத்தப்பட வுள்ளன. வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம் பெறவுள்ளன.
தமிழ கத்தின் தலைசிறந்த பேச் சாளர்களின் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மேலும், நூல் விற்ப னையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சிக்கு வரு பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்ப டையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்கு கள் அமைத்திடவும், முதி யோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் அரங்குகளில் சேலம் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப் படுத்தி அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடை பெறும் வகையிலும் ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளது. இப்புத்தகக் கண் காட்சியினை புத்தக ஆர்வ லர்கள், மாணவ, மாணவி யர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன டைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா. கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், உதவி ஆட்சியர் (பயிற்சி) வாகி சங்கீத் பல்வந்த், மாவட்ட வருவாய் அலு வலர் மரு.பெ.மேனகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனைவியை தவறாக பேசியவரை தட்டிக் கேட்ட இளைஞர் கொலை
திருப்பூர் நவ. 11- திருப்பூர் காலேஜ் ரோடு பூத்தார் பகுதியில் துவா ரகா 3ஆவது வீதியில் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரவீன் (33) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களது பக்கத்து வீட்டில் தர்மபுரியைச் சேர்ந்த அண்ணா மலை (40) என்பவர் வசித்து வந்தார். இவர் ராணியை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பிரவீன், மது போதையில் அண்ணாமலை வீட்டின் முன்பு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. வெளியூர் சென்றிருந்த அண்ணா மலைக்கு இது பற்றி அவரது வீட்டுக்கு அருகில் இருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை வியாழக்கி ழமை இரவு திருப்பூருக்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் உடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பிரவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்தில் காயம டைந்த பிரவீனை அருகில் இருந்தோர் உடனடியாக மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அண்ணாமலையை கைது செய்தனர். நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
உணவுப்பொருட்கள் சேதம் - 10 மாதங்களில் 16 லட்சம் அபராதம் வசூல்
திருப்பூர், நவ.11 - திருப்பூர் மாவட்ட ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப் பட்டிருந்த உணவுப் பொருட்கள் சேதம் அடைந்தது மற்றும் இழப்பு ஏற்பட்டது தொடர்பாக, அந்த கடைகளின் ஊழியர்க ளிடம் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூபாய் 16 லட்சம் அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 1163 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 836 முழு நேர ஊழியர்களும், 399 பகுதி நேர ஊழியர்களும் விற்பனையாளர்களாக வேலை செய்து வரு கின்றனர். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி உள் ளிட்ட சரக்குகளின் அளவுக்கும், கடையில் இருப்புக்கும் கள ஆய்வில் வித்தியாசம் ஏற்பட்டால் அந்த இழப்புக்கு சம்பந் தப்பட்ட கடை விற்பனையாளர் மீது அபராதம் விதிக்கப்படு கிறது. அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய இழப்பு ஏற்பட்டால் கிலோ தலா ரூபாய் 25 வீதமும், சர்க்கரை, மண்ணெண் ணெய் ஆகியவற்றிற்கு கிலோ ரூபாய் 50 வீதமும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இழப்பு மற்றும் விரயம் ஏற்பட்ட தற்காக ரேஷன் ஊழியர்களுக்கு ரூபாய் 11 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அக்டோ பர் வரையிலான பத்து மாத காலத்தில் ரூபாய் 16 லட்சம் அபராதமாக இந்த ஊழியர்களிடமிருந்து வசூலிக்கப்பட் டுள்ளது. இது குறித்து வழங்கல் அலுவலர் கூறுகையில், சாக்கு மூட்டை சேதமடைவதால் குறைந்த அளவே விரயமாகும். ஆனால் மிக அதிக அளவு உணவு பொருள் காணாமல் போனால் அதற்கு சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரே நேரடி பொறுப்பு, என்று தெரிவித்தார். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர்களிடம் கேட்ட பொழுது, ரேஷன் கடைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட சரக்கு களை சாக்கு மூட்டைகளில் குடோன்களில் இருந்து ஏற்றி லாரிகளில் அனுப்பும் பொழுதே விரயம் ஏற்படுகிறது. 75 கிலோ, 50 கிலோ மூட்டைகள் இங்கு வந்து சேரும்போது, அளவு குறைவாக இருக்கும். ஆனால் அதற்கு எங்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். ஏற்கனவே தரக்கூடிய குறைந்த சம்பளத்தில் இதனாலும் இழப்பு ஏற்படுகிறது என்று வேத னையுடன் தெரிவித்தனர். இது குறித்து சிஐடியு கூட்டுறவு பணியாளர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் கௌதமன் கூறுகையில், நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் இருந்து அனுப்பப்படும் பொழுதே விரயம் ஏற்படுகிறது. அந்த சாக்கு மூட்டைகளும் தரம் இல்லாதவைகளாக இருக்கின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் சரக்கை இறக்கும்பொழுது இருக்கும் நிலையை பற்றி மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கி றோம். அப்போதைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக் கப்படுகிறது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் முதல் 3000 வரை இழப்பு ஏற்படுகிறது. இழப்பு ஏற்படும் பிரச்ச னைக்கு கடை விற்பனையாளர்களை மட்டும் பொறுப்பாக் காமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
திருப்பூரில் இன்று நான்கு முக்கிய பகுதிகளில் கூட்டுத் தூய்மை பணி
திருப்பூர், நவ. 11- திருப்பூர் மாநகராட்சியில் 4 முக்கிய பகுதிகளில் சனிக்கி ழமை கூட்டுத் தூய்மை பணி (மாஸ் கிளீனிங்) மேற்கொள் ளப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாநக ராட்சியில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்னும் தலைப்பில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதன்படி, இரண்டாவது சனிக்கிழமை ஆன 12ஆம் தேதி (இன்று) திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம் 1ல் உள்ள அவினாசி சாலை, மண்டலம் 2ல் உள்ள பெருமாநல்லூர் சாலை, மண்டலம் 3ல் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் காமராஜ் சாலை, மண்டலம் 4ல் உள்ள பல்லடம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெற உள்ளது. மேலும் பொது இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள், கட் அவுட்டுகள், விளம் பரப் பலகைகள் மற்றும் அவற்றை வைப்பதற்காக அமைக்கப் பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ள பழைய கட்டமைப்புகள், சிதிலமடைந்த சாலைகள, தெருக்களின் பெயர்ப் பலகை கள், சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இயக்க இயலா நிலையில் உள்ள வாகனங்கள் மற்றும் இதர கழிவுகள் ஆகிய வற்றை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளபட உள்ளது. எனவே பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக் கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க மாநகராட்சி ஆணை யாளர் கிராந்தி குமார் பாடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நாய்கள் கடித்து ஆடுகள் பலி
அவிநாசி, நவ.10 – அவிநாசி அருகே ராமியம்பாளையம், நடுவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் புதிதாக புகுந்த நாய்கள் கடித்ததில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் அருகே ராமியம்பாளையம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில், 8 ஆடுகள் வியாழனன்று உயிரிழந்தது. இதபோல நடுவச்சேரி மாரப்பம்பாளையத்தில் இரு ஆடுகள் உயிரி ழந்தது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ராமியம்பா ளையத்தில் புகுந்த 5 நாய்கள் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகளை துரத்தி கடித்தது. இதில் 8 ஆடுகள் உயிரிழந்தது. மேலும் 4 ஆடுகள் காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ராமியம்பாளையத்தைச் சேர்ந்த பங்க ளா தோட்டம் சுப்பிரமணி, மேற்கு தோட்டம் நாகராஜ், மனோஜ் ஆகியோரது ஆடுகள் பலியானது ஆகவே நாய்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சாலை அகலப்படுத்தும் பணி துவக்கம்
தருமபுரி, நவ.11- தருமபுரி அருகே வெள்ளக்கல் முதல் ஈசல்பட்டி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத் தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கல் பகுதியில் இருந்து ஈசல்பட்டி வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் நீள சாலை உள்ளது. இச்சாலை வழியாக அதிகளவில் சரக்கு வாகனங்க ளும், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், விவசாய பொருட் களை சந்தை படுத்துவதற்காக காய்கறிகள், பூக்கள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் செல்கின் றன. இந்நிலையில் குறுகிய சாலையாக இருப்பதால் வாக னங்கள் எளிதில் செல்வதற்கு ஏதுவாக சாலையை அகலப் படுத்த வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பிரதம மந்திரி கிராம சாலைகள் அமைக் கும் திட்டத்தின் கீழ், இச்சாலையை அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இச் சாலையை சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் சீரமைத்தல் உள் ளிட்ட பணிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந் தில்குமார் தொடக்கி வைத்தார். இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிர மணி, ஊராட்சி மன்ற தலைவர் பழனி அறிவு, ஒன்றிய கவுன் சிலர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை அருகே யானைகள் முகாம்
கோவை, நவ.11- வால்பாறை அருகே உள்ள அக்காமலையில் 20க்கும் மேற்பட்ட யானைகள் காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச் சரகங்கள் உள்ளது. இங்குள்ள அடர்ந்த தேயிலை தோட்டங் கள் உள்ளதால் வனப்பகுதியைவிட்டு வனவிலங்குகளான யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்டவை தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிகளவில் உலா வருகிறது. இந்த காட்டுயானைகள் அருகில் உள்ள கேரளம் வனப் பகுதியைவிட்டு தமிழக வனப்பகுதி முடிஸ், சின்கோனா, நல்ல காத்து, நல்ல முடி, குரங்கு முடி, சோலையார் என பிற பகுதிகளில் நடமாட்டம் உள்ளது. அக்காமலை எஸ்டேட் பகுதி யில் 10 நம்பர் காட்டுப் பகுதியில் ஒரே நேரத்தில் ஆறு குட்டி களுடன் 20 காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகா மிட்டுள்ளது. எனவே, யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை அப் பகுதி ஒட்டியுள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு செல் வோர், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செல்லுமாறு வனத்துறை எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.
தகராறில் ஈடுபட்ட நபரிடம் ரூ.80 லட்சம் பறிமுதல்
கோவை, நவ.11- நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்ட நபரிட மிருந்து ரூ.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுகுறித்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்ப வர் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கை பைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார். இதனால், நடத் துனர் கைப்பை வைத்திருந்த குமாரை டிக் கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால், குமார் டிக்கெட் எடுக்க மறுத்ததால் நடத்துந ருக்கும், குமாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடத் துனர், பேருந்தை காட்டூர் காவல் நிலையத் திற்கு கொண்டு சென்று புகார் அளித்தார். அப் போது விசாரித்த போலீசார், குமார் வைத்தி ருந்த சந்தேகத்திற்கிடமான பையை சோதனை மேற்கொண்டதில் அநத கைப்பை யில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீ சார் பணத்தை எண்ணி பார்த்தபோது 80 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இதுகுறித்து குமாரி டம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பைனான்ஸ்காக வைத்திருந்த பணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பணத்திற்கான போதிய ஆவ ணங்கள் இல்லாததால் குமாரை கைது செய்த காட்டூர் போலீசார், பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: 7.50 கிலோ தங்கம் பறிமுதல்'
கோவை, நவ.11- கோவை விமான நிலையத்தில் 7.50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக 20 பேரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், பீளேமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து சிங் கப்பூர், சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப் படுகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விமா னங்களில் தங்கம் கடத்தி வரப்படுகிறதா? என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி கள் சோதனை மேற்கொள்வது வழக்கம். கடந்த நவ.9 ஆம் தேதியன்று சிங்கப்பூரிலி ருந்து கோவை விமான நிலையத்திற்கு விமா னம் ஒன்று வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது 20 பயணிகளின் நடவ டிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரி கள், அவர்களை அழைத்து சோதனை மேற் கொண்டனர். அதில், அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் எடுத்து வந்தது சோத னையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இதற்கான உரிய ஆவணங்கள் இருக்கி றதா? வரி செலுத்தி உள்ளீர்களா? என விசா ரணை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவ ணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந் தது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் 20 பயணிகளிடமிருந்து 7½ கிலோ தங்க நகை களை பறிமுதல் செய்து, சுங்கத்துறை அதிகா ரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சுங் கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மாநில அளவிலான நீச்சல் போட்டி: சேலத்திலிருந்து 30 பேர் தேர்வு
சேலம், நவ.11- சேலத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற 30 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு 100 மீட்டர், 400 மீட்டர் உட்பட 10 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில், 75 மாணவி கள் இலக்கை நோக்கி நீச்சல் அடித்து திறமையை வெளிப் படுத்தினர். ஒவ்வொரு வயதுக்குட்பட்ட பிரிவுகளிலிருந்து முதல் 3 இடங்களை பிடித்த 30 பேர் அடுத்த ஆண்டு பிப்ர வரி மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நாமக்கல், நவ.11- நாமக்கல் நகர பகுதியில் காவல் துறை சார்பில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் திருடிச் செல்லப்படும் வாகனங்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக நான்கு இடங் களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில், இந்த கேமராக்களின் காட்சிகள் பதிவாகும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து திருடப் பட்டாலும், நகைப்பறிப்பில் ஈடுபடும் வெளிமாவட்ட திருடர் கள் நகருக்குள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை யும் இதன் மூலமாக கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்மையில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்கள் இந்த கேமரா உதவியுடனே கண்டறியப் பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத் துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கேமரா நாமக்கல் நகர எல்லைக்குள் பிற மாவட்டங் களை இணைக்கும் வகையிலான முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் (சேலம்), வள்ளிபுரம் (கரூர்), கோல்டன் பேலஸ் உணவகம் அருகில் (திருச்சி), நாமக்கல் - திருச்செங்கோடு சாலை தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் (ஈரோடு) என நான்கு இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு, நவ.11- ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்டேரி பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, வறட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டியுள்ளன. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் 104 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிக ரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் வியாழனன்று 104.44 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் பவானி ஆற்றங் கரையோர தாழ்வான இடங் களில் வசிக்கும் மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல் லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடப்பட்டுள்ளது.
பெண்ணின் தாலியை பறித்தவருக்கு சிறை
அவிநாசி, நவ.11- அவிநாசி அருகே உள்ள பெருமாநல்லூர் சிஎஸ்ஐ காலனியை சேர்ந்தவர் வசந்தி (38). இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வழிமறித்த அடையாளம் தெரியாத நபர், வசந்தி கழுத் தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவ கோட்டை, ராம்நகரைச் சேர்ந்த அய்யனார் (எ) அய்யப்பன் (47) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு அவிநாசி குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. இதில், அய்யப்பனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.