districts

img

ஈரோடு - 2 ஆவது நாளாக தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு, ஜூன் 24- ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனி யாருக்கு ஒப்பந்தம் விடப் படுவதற்கு கண்டனம் தெரி வித்து தூய்மை பணியா ளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி யுள்ளனர். இதன்தொடர்ச்சியாக சனி யன்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சனியன்று ஈரோடு மாநராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாநகராட்சி மொத்தம் 60 வார்டு களைக் கொண்டது. நான்கு மண்டலங் களாக செயல்பட்டு வரும் நிலையில் இங்கு 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலமாக  ஏராளமான பணியாளர்களும் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மைப் பணி களை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதற் கான அரசாணை வெளியாகி உள்ளது. இதன்  மூலம் தங்களுக்கான பணி வாய்ப்பு மறுக்கப் படுவதாகவும் 480 நாட்கள் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தங்களது கோரிக்கையை வலியு றுத்தி மாநகராட்சி வளாகத்தில் உள்ளிருப்பு  போராட்டத்திலும் ஈடுபட்ட பணியாளர்கள் இரண்டாவது நாளான சனியன்று மாநக ராட்சியின் மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, உறுதி மிக்க போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு தலைவர் எஸ்.சுப்ர மணியன், செயலாளர் எஸ்.மாணிக்கம்  மற்றும் ஏஐடியுசி சின்னசாமி உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.