உடுமலை, டிச.24- எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தினை தரம் உயர்த்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள எரி சனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப் பாட்டில் உடுமலை ஒன்றியத்திலுள்ள 38 கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றன. தினமும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், மாதத்திற்கு 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள், கர்ப்பிணி பெண்களுக் கான பரிசோதனைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண் ணிக்கைக்கு ஏற்ப சிகிச்சை வசதிகள் கிடையாது. குறிப் பாக, ஆறு படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. இத னால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்ற னர். மேலும், மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதி யில் வசிப்போருக்காக செயல்பட்டு வந்த துணை சுகா தார நிலையம் மூடப்பட்டதால் மலைவாழ் மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்களே செட் டில்மெண்ட் பகுதிக்கு செல்கின்றனர். இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் புற நோயாளிகள் பல மணி நேரம் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகி றது. இதேபோல், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இதர பணிகளுக்கு மருத்துவர்கள் செல்லும் நிலையில் கிரா மப்புற மக்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. ஆகவே, புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப் பிற்கு ஏற்ப எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்பு மருத்துவர்களை நியமிப்பதுடன், அதிக படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்க ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.