districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் இபிஎப் பென்சனர்ஸ் சங்கம் வலியுறுத்தல்

நாமக்கல், ஜூலை 31- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயி ரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என இபிஎப் பென்சனர்கள் சங்க சேலம் மண்டல  கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு  தனியார்  திருமண மண்டபத்தில் இபிஎப் பென் சனர்கள் சேலம் மண்டல மாநாடு, வரவேற்புக் குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் மாணிக்கம் வரவேற்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர் பாபு கோரிக் கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு பொரு ளாளர் மோகனன் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில், குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அது வரை இடைக்காலமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கமுடேசன், ஆண்டு உயர்வு,  ஆர்ஓசி சர்வீஸ் வெயிட்டேஜ்  போன்ற சட்ட  சலுகைகளை அமலாக்க வேண்டும். கேரளத் தைப்போல இபிஎப் பென்சனர்களுக்கு ரூ.1,600 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.