கோவை, மார்ச் 30- தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி களில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. யூத் கேம் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில், யூத் கேம் சேம்பியன்சிப் என்ற போட்டிகளானது, தில்லியில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடை பெற்றது. இதில், சிலம்பம், யோகா, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கோவை சூலூர் பகுதியில் உள்ள ரெளத்ரா சிலம்ப அகா டமியை சார்ந்த 10 பேர் சிலம்பம் போட்டிகளிலும், 4 பேர் யோகா போட்டிகளிலும் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப் படுத்தி, சிலம்ப கலையில் 4 தங்கமும், 6 வெள்ளியும், யோகா போட்டியில் 4 தங்கமும் வெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் புதனன்று ரயில் மூலமாக கோவை வந்த டைந்தனர். அவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.