திருப்பூர், ஜூன் 11 – பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் நல்லாறு அணை கட்ட வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் மேற்கொண்டுள்ள நம்ம நல்லாறு நடைபயணத்திற்கு இரண்டாவது நாளான ஞாயிறன்று வழிநெடுக கிரா மங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தமிழ்நாடு அரசு பரம்பிக்குளம் ஆழி யாறு திட்டத்தில் நல்லாறு அணையை விரைவில் துவங்க வலியுறுத்தி விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் நம்ம நல்லாறு நடைபயணம் சனியன்று பல்லடம், அருள்புரத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். கணபதிபாளையத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரா வாழ்த்திப் பேசினார். உகாயனூரில் விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், தென்னை விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் உடு மலை பரமசிவம் ஆகியோர் விளக்கிப் பேசினர். பொங்கலூரில் விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் டில்லிபாபு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். நடைபயணப் போராளிகளுக்கு பொங்கலூரில் பனியன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தலைமையில் மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்டூரில் விவசாய சங்க கோவை மாவட்ட தலைவர் வி.கே.பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிச்சாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினார். இதைத் தொடர்ந்து திருமலை நாயக்கன்பாளையம், கெங்கம நாயக்கன்பாளையம், லிங்கநாயக் கன்பாளையம், இடையபட்டி ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இதில், விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், பல்லடம் லோகநாதன், விவ சாய சங்க கோவை மாவட்ட தலைவர் வி.கே.பழனிச்சாமி, பல்லடம் ராஜ கோபால் ஆகியோர் நடைபயணத் தின் குறித்து விளக்கிப் பேசினர். இதையடுத்து, மேட்டுக்கடையில் விவசாயிகள் சங்க தாராபுரம் வட்டத் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உடுமலை ராஜகோபால், பரமசிவம், பஞ்ச லிங்கம், வி.கே.பழனிச்சாமி, மது சூதனன் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஒவ்வொரு இடத்திலும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடினர்.
முதல் நாள் நடைபயணத்தை மேட்டுக்கடை பகுதியில் நிறைவு செய்த நடைபயணக் குழுவினர் இரண்டாம் நாளான ஞாயிறன்று குண்டடம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மேற் கொண்டனர். மேட்டுக்கடையில் தொடங்கி, தும்பலப்பட்டி, காணிக்கம் பட்டி பிரிவு, நந்தவனம்பாளையம், செம்மேகவுண்டன்பாளையம், ஈஸ்வர செட்டிபாளையம், பெல்லம்பட்டி, நவனாரி, குப்பநாயக்கன்பட்டி, பெரிய குமாரபாளையம் ஆகிய பகுதி களில் பிரச்சாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து மாலையில் குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி.நோக்கி பயணத் தைத் தொடர்ந்தனர். பூளவாடியில் இரண்டாம் நாள் பயணத்தை நிறைவு செய்தனர். இந்த பயணத்தின்போது வழி நெடுக கிராம மக்கள் ஆர்வமுடன் வர வேற்பு அளித்தனர். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார், பயணத்தில் பங்கேற்றி ருக்கும் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பரமசிவம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நல்லாறு அணை கட்ட வேண்டியதன் முக்கியத் துவத்தை விளக்கி உரையாற்றினர். தாராபுரம் விவசாயிகள் சங்க நிர்வாகி ஆர்.வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கட்சி யின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் ஆகியோர் நடைபயண இயக்கத்தை வரவேற்று பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி ஞாயிறன்று மாலை இந்த குழுவினரை வாழ்த்திப் பேசினார். மாதர் சங்க திருப்பூர் தெற்கு ஒன்றியத் தலைவர் பா.லட்சுமி, ஏபி நகர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாம் நாளான திங்களன்று இந்த நடைபயணக் குழுவினர் குடிமங்கலம் ஒன்றியம், உடுமலை ஒன்றியத்தின் கிரா மங்கள் வழியாக மாலையில் உடுமலை பேட்டை நகரைச் சென்றடைகின்றனர். அங்கு நடைபெறும் பிரம்மாண்டமான நிறைவுப் பொதுக்கூட்டத்தில் விவசாயி கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.