districts

img

சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள்

கோவை, செப்.15- கோவா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில்  12 தங்கம் வென்ற வீரர்களுக்கு  கோவை  ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கோவாவில் கடந்த செப்.11ஆம் தேதியன்று தேசிய அள விலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, இதில் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் பெண்கள், ஆண்கள் பிரிவில் இளை யோர், மூத்தோர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது. இதில், தமிழகம்  சார்பில் 12 பேர் கலந்து கொண்டனர்.   இப்போட்டியில் 12 பேர் சிலம்பம், சுருள்வாள், வேல்கம்பு, கேடயம் ஆகியவற்றில் வெற்றி பெற்று தங்க பதக்கமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையும் வென்றனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி ஏ.ஆர். ஸ்போர்ட்ஸ்  அகாடமி சார்பில் கலந்துகொண்ட ஜோன்ஸ் நேதன், அஜீஸ்,  கண்ணன், இஷானா ஸ்ரீ, பூர்ணிஷா, திரனேஷ் உள்ளிட்ட 5  பேரில்  தனியார் பள்ளி ஆசிரியை பூர்ணிஷா மற்றும் அவரது  7 வயது மகன் திரனேஷ் தங்கம் வென்றனர். இதனை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்கள் ரயில் மூலம்  கோவைக்கு வந்தனர். இவர்களை ரயில் நிலையத்தில் மாண வர்களின் பெற்றோர் மற்றும்  உறவினர்கள்  மாலை அணிவித்து  வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து சிலம்பம் பயிற்சியாளர் ராஜேந்திரன் கூறு கையில், தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டி களில் தமிழகம் சார்பில்  12 பேர் கலந்து கொண்ட நிலையில்  அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று ஒட்டுமொத்த சேம்பி யன்ஷிப் பட்டத்தை தமிழக அணி வென்றுள்ளது. இது தமிழ கத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பாரம்பரிய கலைகளை கற்கும்  மாணவர்களுக்கு இட ஒதுக் கீட்டிலும் வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.