districts

img

பாரா ஒலிம்பிக்கில் அசத்திய மாணவிக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல், செப்.16- பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் சென்று அசத்திய, நாமக்கல்லைச் சேர்ந்த மருத் துவ மாணவிக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்சில் நடைபெற்ற பாரா ஒலிம் பிக்கில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன். இவர் நாமக்கல் - மோகனூர் சாலை, லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலை யில், துளசிமதி படித்து வரும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு திங்களன்று வருகை தந்தார். அவருக்கு கல்லூரி நுழைவாயில் முன்பு மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் கல்லூரி முதல் வர், பேராசிரியர்கள், சகமாணவிகள், மாணவர்கள் மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை யடுத்து நடைபெற்ற பாராட்டு விழா வில், தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவி துளசிமதிக்கு, 2 சவரன் தங்க சங்கிலியை ராஜேஷ்குமார் எம்.பி., மாணவியின் பெற்றோரிடம் வழங்கி னார். பின்னர் துளசிமதிக்கு அணிவிக் கப்பட்டதையடுத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட் டது. இதுகுறித்து துளசிமதி செய்தியா ளர்களிடம் பேசுகையில், தங்கப்பதக் கம் வாங்கவில்லை என கஷ்டமாக இருந்தது. இங்கு தனக்கு வழங்கிய பாராட்டை பார்க்கும் போது பெருமை யாக உள்ளது. இறுதி போட்டியில் உடல் ஒத்துழைக்காததால் தங்கப்பதக்கம் வாங்க முடியவில்லை. அடுத்த போட்டி யில் கண்டிப்பாக தங்கப்பதக்கம் பெறு வதற்கு கடுமையாக உழைப்பேன். இந்த பதக்கம் பெறுவதற்கு பின்னாடி நிறைய பேரின் உழைப்பு உள்ளது. தமிழக முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் உதவி செய்த னர். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. இன்னும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது என்றும், பயிற்சிக் காக தமிழகஅரசு ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியது, என்றார்.