districts

img

ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

சேலம், அக்.9- மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மக்களை தேடி மருத்துவ பணி யில் தன்னார்வலர்கள் எண்ணற் றோர் பணியாற்றி வருகின்றனர். அரசு அறிவித்த பணி நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக பணி செய்ப வர்களை தொழிலாளராக அங்கீக ரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங் கிட வேண்டும். ஸ்கோரிங் முறையி லான ஊக்கத் தொகையினை ரத்து  செய்து, பேறு கால விடுப்பு, பண் டிகை கால போனஸ் உள்ளிட்டவை கள் வழங்க வேண்டும், நிலுவை யில் உள்ள ஊக்கத் தொகையை  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் பி. பாலாம்பிகை தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஏ.கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட் டச் செயலாளர் கவிதா, பொருளா ளர் செந்தமிழ் செல்வி உள்ளிட் டோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஈரோடு மக்களை தேடி மருத்துவம் திட் டத்தில் பணியாற்றும் தன்னார்வலர் களை சுகாதாரத்துறையின் கீழ் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.ரேவதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே.தனலட் சுமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத் தின் முடிவில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் ஆட் சியர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மக் களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத் தலைவர் சத்யா தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செயலா ளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி, மாவட்ட தலைவர் எம். அசோகன், மாநில உதவித்தலை வர் ஜெயக்கொடி வாழ்த்தி பேசி னர். இதில், ஏராளமான மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.