நாமக்கல், ஜன.1- மணியனூர் போயர் சமூக மக்க ளின் சுடுகாடு வசதியினை உறுதிப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், மணிய னூர் ஊராட்சியில் பல தலைமுறைக ளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மான போயர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பயன் படுத்தும் சுடுகாட்டினை ஆக்கிர மித்து, அழித்தொழிக்கும் வகை யில், 100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் ரூ.24 லட்சத்து 88 ஆயிரத்து 801 செலவழித்து நீர் குட்டையை ஆழப்படுத்துதல் கரையை பலப்ப டுத்துதல் வேலைகள் தற்போது நடை பெற்று வருகின்றன. இந்த சுடுகாடு நிலம் அரசு கணக்குகளின் படி தரிசு என்ற பெயரில் உள்ளது. எனவே, வரு வாய்த்துறை இந்த நிலத்தை உரிய அளவுகளின்படி அளந்து, பதிவேட் டில் போயர் சமூக சுடுகாடு என பெயர் மாற்றித் தர வேண்டும் என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மணியனூர் பகுதியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.கருப் பையா தலைமை வகித்தார். எஸ்.சுப் பிரமணி முன்னிலை வகித்தார். அப்போது கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.தங்கமணி சிறப் புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத் தில் கட்சியின் வட்டக்குழு உறுப்பி னர்கள் கே.கிருஷ்ணன், எம்.செல்வ ராணி, வி.கந்தசாமி, பி.சிகாமணி, ஆர்.குழந்தைவேல் உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.