கோவை, பிப்.26- அறிவொளி இயக்கத்தின் ஆய்வு கட் டுரை மற்றும் இயக்கத்தின் பணி அனுப வங்கள் அடங்கிய “அறிவொளி சுடர்கள்” என்ற நூல் கோவையில் வெளியிடப்பட்டது. மாநகர, மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, அனைத்து மக்களுக்கும் கல்வியறிவினை வீடுகளுக்கு கொண்டு சேர்த்திட்டது அறிவொளி இயக் கம் ஆகும். அப்பெரும்பங்காற்றிய இயக்கத் தின் பணிகளை நினைவு கூறுகின்ற ஆய்வு கட்டுரைகள், பணி அனுபவங்கள் ஆகிய வற்றை தொகுத்து தயாரிக்கப்பட்ட “அறி வொளி சுடர்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற விழாவிற்கு, பாரதியார் பல் கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், முதி யோர் கல்வி இயக்கத்தின் முன்னாள் பொறுப் பாளருமான ம.ஜெயக்குமார் தமைமை ஏற் றார். அறிவொளி இயக்க செயலாளர் கே.காளி முத்து வரவேற்றார். இந்தியன் வங்கியின் முன்னாள் அதிகாரி வி.சுந்தரம், நூலினை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ச.வி.சங்கர் நூலினை வெளியிட, கோவை மாமன்ற 67 ஆவது வார்டு கவுன்சிலர் வித்யா ராமநாதன் பெற்றுக்கொண்டார். பேராசிரியர் கே.ராமசாமி, நூலினை பற்றியும், இயக்கப் பணிகளில் 30 ஆண்டுகள் முனைப்புடன் பணி யாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரி யர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து பேசி னார். இதையடுத்து அறிவொளி இயக்க எஸ்.எஸ்.குளம் ஒன்றிய ஒருங்கினைப்பாளரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான நட ராஜன், லயன் ஆர்.முத்துசாமி, உடுமலை வட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சிவராஜ், மக ளிர் அமைப்புக்குழுவின் லட்சுமி, ராமகிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். இதற்கிடையே முன்னாள் ஆட்சியர் ச.வி. சங்கர் பேசுகையில், கோவை என்பது சிறந்த தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். அறிவியல் அறிவு, தொழில் அறிவு, இயற்கை யான விவசாயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருந்தது. ஆனால், மாவட்ட பெரும் பகுதி மக்கள் எழுத்து, கல்வியறிவு இல்லாத வராக இருந்தது பெரும் வியப்பாக இருந் தது. இம்மக்கள் கல்வியறிவு பெற்றால் மாவட் டமும், தொழிலும் இன்னமும் சிறப்பாக வள ரும் என உறுதியாக நம்பினேன். இதற்கான தயாரிப்பு பணிகளை துவங்கியபோது, பெரும் ஆதரவும், உற்சாகமும் வழங்கு கின்ற வகையில் ஆசிரியர் பெருமக்கள், தன் னார்வலர்கள் சிறப்பாக பனியாற்றினர். இயக் கம் பெரும் வெற்றியடைந்தது என பெரு மிதம் தெரிவித்தார். இறுதியாக இயக்கத் தின் ஆசிரியர் ஐ.மோகன் தாஸ் நன்றி கூறி னார்.