பிப்.16 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
சேலம், பிப்.8- சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.16 ஆம் தேதி நடைபெற வுள்ளதென மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடந்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.16 ஆம் தேதி சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய வுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற விருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலா கவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல், பிப்.8- நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் பிப்ரவரி மாதத்திற் கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களை நடத்துவதற் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மின்வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் கோட்ட அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங் கள் நடைபெறுகின்றன. அதன்படி, பிப்.14 ஆம் தேதி காலை 11 மணிக்கு பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவல கத்திலும், பிப்.17 ஆம் தேதி பள்ளிபாளையம் செயற்பொறியா ளர் அலுவலகத்திலும், பிப்.21 ஆம் தேதி திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பிப்.28 ஆம் தேதி ராசி புரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திலும் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
தாறுமாறாக ஓடிய கார் பள்ளிக்குள் புகுந்தது மாணவர் உட்பட இருவர் காயம்
திருப்பூர், பிப். 8 - திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள பாரதி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டுப் பாட்டை இழந்த கார் ஒன்று தாறுமாறாக உள்ளே புகுந்ததில் மாணவர் ஒருவர் உள்பட இருவர் காயமடைந்தனர். காரை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். அவர் உள்பட காரில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர் களை பொது மக்கள் சரமாரியாகத் தாக்கி காவலர்களிடம் ஒப் படைத்தனர். திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாரதி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற னர். இந்த பள்ளியில் வெள்ளியன்று ஆண்டு விழா நடப்பதை ஒட்டி மாணவ மாணவிகள் வியாழனன்று பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் இருந்து வித்யாலயம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த மாருதி 800 கார், திடீரென பள்ளிக்குள் புகுந்தது. பள்ளி வளாகத் திற்கு முன் நின்ற இரண்டு பேரை தூக்கி வீசிய பின்னர் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத் தின் மீது மோதிய கார் தொடர்ந்து அங்கு கலை நிகழ்ச்சிக ளுக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீதும் மோதியது. இதில் ஆறாம் வகுப்பு படிக்கும் தரணிநா தன் என்ற மாணவன் தூக்கி வீசப்பட்டார். இதனால் மாணவர் கள் அங்கிருந்து சிதறி ஓடினர். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் தேசியக்கொடி ஏற்றுவதற்காக நடப்பட்டிருந்த கொடிக்கம்ப மேடையின் மீது மோதி நின்றது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்க ளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள்ளாக காரை ஓட்டி வந்தவரும், மற்றொருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் காருக்குள் இருந்த மற்றொரு நபரை ஆசிரியர்களும், பொதுமக்களும் பிடித்தனர். அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர் கள் அவரை சரமாரியா\கத் தாக்கினர். மேலும் காரை ஓட்டி வந்தவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உட னடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் மூலம் அடிபட்ட மாணவனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்தவர் கார்த்தி என்பதும், உடன் வந்தவர்கள் செந்தில் குமார், கர்ணன் என்பதும் தெரியவந்தது. 3 பேரும் மதுபோ தையில் இருந்தனர். மதுபோதையில் அசுர வேகத்தில் காரை ஓட்டி வந்து,கட்டுப்படுத்த முடியாமல், பள்ளிக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
அமராவதி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது
திருப்பூர், பிப்.8- திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அம ராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நூற்றுக் கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடி நீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை முடியும் தறுவாயில், டிசம்பர் மாதம் இறுதியில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டி யது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வ ரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. மேலும் மழை பெய்யாததால் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அணையில் கடந்த 30 ஆம் தேதி நீர்மட்டம் 86 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 81.66 அடியாக குறைந்துள்ளது.
மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு
திருப்பூர், பிப்.8 - பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக அமைய உள்ள மதுபான கூடத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே நகர், கேத்தம் பாளையம், குமாரசாமி நகர் ஆகிய மக்கள் வாழ் பகுதிக ளிலிருந்து, பிச்சம்பாளையம் பேருந்து நிறுத்ததிற்குத் தினந் தோறும் ஏராளமான பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலை யில் இப்பகுதியில் புதிதாக மதுபான கூடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படும் விதமாக அமைய உள்ள மதுபான கூடத் திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அப்ப குதி மக்கள் பிச்சம்பாளையத்தில் தட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில், மது பான கூடம் அமையும் பட்சத்தில் அங்கு வரும் குடிமகன்க ளால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்க ளுக்கு தொல்லைகள் ஏற்படும். இது தவிர அருகாமையில் உள்ள வழித்தடங்கள், காலி மனைகளில் குடிக்க வருபவர்க ளால் சுகாதார சீர்கேடு உட்பட பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் மதுபான கூடம் அமைக் கக்கூடாது என்று தெரிவித்தனர்.
பிப்.16 ஆம் தேதி வேலை நிறுத்தத்திற்கு பிஎஸ்என்எல் சங்கங்கள் ஆதரவு கருத்தரங்கம்
ஈரோடு, பிப். 8- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை களை கண்டித்து வரும் பிப்.16 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து ஈரோட்டில் பிஎஸ் என்எல் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள நிரந்தர ஊழியர், ஓய்வூதியர் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு சார்பில், ஈரோடு டெலிபோன் பவன் கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, பிஎஸ்என்எல் ஒருங்கி ணைப்பு குழு மாவட்டத் தலைவர் என்.குப்புசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட கன்வீனர் எஸ்.பாலு பிஎஸ்என்எல் மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ் ணன், ஓய்வூதியர் சங்க மாநில அமைப்புச் செயலர் டி.கே.பி ரசன்னன், ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சையத் இத்ரீஸ், ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் சி.பாஸ் கர், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பழனி சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில், நிரந்தர ஊழியர்களின் ஊதிய மாற்றம், ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம், பொதுத்துறை நிறுவ னங்களை பாதுகாப்பது, மாற்றப்பட்ட 4 தொழிலாளர் நலச்சட் டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, வரும் பிப்.16ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தில் திரளானோர் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
உதகை, பிப்.8- மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கர்ப்பம் ஆக் கிய தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த 38 வயது மதிக் கதக்க நபர்க்கு 35 வயதில் மனைவி மற்றும் 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகி றது. அந்த 38 வயதின் நபரின் மனைவி கேரட் அறுவடை பணிக்கு சென்று விடுவார். இந்நிலையில் அவர் பணி களை வேகமாக முடித்துவிட்டு வீட்டுக்கு சீக்கிரமாக கடந்து சில நாட்களாக வந்துள்ளார். வீட்டிற்கு வந்து மனைவி இல் லாத சமயத்தில் மது அருந்திவிட்டு சொந்த மகளுக்கே பாலி யல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு இடையே சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட தால், சிறுமியின் தாயார் அவளை உதகை அரசு மருத்து வமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்த போது சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தந்தை மது அருந்திவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் உதகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் அல்லிராணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமி யின் தந்தையை கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நி றுத்தி சிறையில் அடைத்தனர்.
கொத்தடிமை முறை ஒழிப்பு தினம்
கோவை, பிப்.8- கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, கோவையில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே கொத்தடிமை ஒழிப்பு தினத்தை பற்றியும் கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றி யும் எடுத்துரைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளின் உரிமைகள், குழந்தை தத்தெடுத்தல் விவரங் கள், குழந்தை திருமணம் தடுத்தல் பற்றிய விவரங்கள் அடங் கிய பிரசுரங்களை வழங்கினார்.
மீன் முள் சிக்கி ஒருவர் மரணம்
கோவை, பிப்.8- மீன் முள் தொண்டையில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், பீளமேடு தண்னீர்பந் தல் பகுதியில் வசித்து வரும் ஜங்கூர் சஹானி (48). கடந்த 15 வருடங்களாக கோவை யில் தங்கியிருந்து வேலை செய்து வருகி றார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மீன் சாப் பிட்டபோது அவரது தொண்டையில் முள் சிக்கியுள்ளது. இதனை அடுத்து கோவை அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மறுநாளும் சிகிச்சைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வருக்கு, இரவு 9 மணி அளவில் மூச்சுத் திண றல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜங்கூர் சஹா னியை சோதித்து பார்த்த போது, அவர் உயிரி ழந்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் அளித்த புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார், ஜங்கூர் சஹானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாதாள சாக்கடையை சரி செய்திடுக
உதகை, பிப். 8- உதகை எச்எம்டி செல்லும் சாலையில் சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை தொட்டி மூடியால் விபத்து அபாயம் உள்ளதால், உட னடியாக உதகை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதகை ஏடிசி பகுதியில் இருந்து பாம்பே கேசில், ரோஜா பூங்கா, நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள், உள்ளிட்ட இடங்க ளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. இச் சாலை சற்று மேடான சாலையாகும். சுற்று லாப்பயணிகள் வாகனங்கள் அதிகளவு செல் லாத நிலையில் உள்ளூர் வாகன ஓட்டிகள் இச்சாலையை அதிகமாக பயன்படுத்தி வரு கின்றனர். இச்சாலையில் எச்எம்டி அருகே சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்துள்ளது. இதனை அறியாமல் வரும் நான்கு சக்கர வாகனங்கள் அதில் சிக்கி கொள்கின்றனர். இதுதவிர இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழ கூடிய சூழலும் நிலவுகிறது. எனவே பழுதடைந்து பாதாள சாக்கடை தொட்டியை சரி செய்ய வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
கத்தியுடன் மிரட்டி கட்டிவைத்து ரூ.40 லட்சம் கொள்ளை
கோவை, பிப்.8- கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வரு பவர் முகமது. இவர் பீளமேடு பகுதியில் தனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார். இந்நி லையில் புதனன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த 5 பேரையும் கட்டி போட்டு அங்கிருந்த, சுமார் 10 லட்சம் ரூபாய் பணம், 20 சவரன் தங்கம், வைர நெக்லஸ், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரம் உட்பட சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பியோடி உள்ளனர். வீட்டின் காவ லாளி விடுப்பில் இருந்ததால், கடையில் வேலை பார்க்கும் நபரை காவலுக்கு அமர்த் திய நிலையில், அவர் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிய நேரத்தில் சம்பவம் நடந்ததுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல் துறையினர் தீவிர விசார ணையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்த வர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, மருதமலை சாலையில் உள்ள தக்ஷா சாரஸ் அடுக்குமாடி குடியி ருப்பு பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் வனஜா என்பவர் வீட்டிலும் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பீரோவில் வைக்கபட்டிருந்த நகை மற்றும் 11,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள் ளனர். இச்சம்பவம், குறித்து வடவள்ளி போலீ சார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆர்எஸ்புரம் பகுதியில் கடந்தவாரம் பருத்தி வியாபாரியின் வீட்டில் நுழைந்து அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டு பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் நடை பெற்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய வர்கள் அனைவரும் பிடிபடும் முன்னரே மீண்டும் இதுபோன்ற துணிகர சம்பவம் நடை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
மனைவி கொலை – கணவனுக்கு ஆயுள் தண்டனை
மனைவி கொலை – கணவனுக்கு ஆயுள் தண்டனை கோவை, பிப்.8- மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (36). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக, வடக்கிபா ளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை, கோவை மாவட்டம் 3 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை புதனன்று முடிவு பெற்று நிலையில், குற்றவாளி தினேஷ்குமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
விஷவாயு தாக்கி ஒருவர் பலி
கோவை, பிப்.8- கோவையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப் டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின் பொழுது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் அருகே உள்ள பெரி யார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரலிங்கம். இவர் விஜயம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வியாழனன்று சவுரிபாளையம் பகுதியில் உள்ள அஸ்வினி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் குணா மற்றும் இராமு என்ற இரு தொழிலாளர்களுடன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென விஷவாயு வெளியேறவே மோகனசுந்தரலிங்கம் மற்றும் அவளுடன் வந்த குணா, ராமு என மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ள னர். இதனையடுத்த அப்பகுதியில் இருந்த மக்கள் உடனடி யாக மூவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மோகனசுந்தரலிங்கம் உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இந்த பணியில் ஈடு பட்டபோது விஷவாயு தாக்கி இருப்பது முதல் கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த மோகனசுந்தரத்தின் குடும்பத்தி னருக்கு அரசின் சார்பில் உரிய நிவாரண வழங்கப்பட வேண் டும் எனவும், அவரது மனைவிக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட தலித் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.
கட்டுமானப் பணிகளை கண்காணிக்க தனிக்குழு அமைப்பு: நீலகிரி ஆட்சியர்
உதகை, பிப்.8- நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் விதிமுறை மீறி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உதகை அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு துயர சம்பவம் நடந்தது. ஒரு தனியார் கட்டிடம் கட்டு மானப் பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில், 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் சாதார ணமாக புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதில்லை. பல்வேறு துறைளின் அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்ப டுகிறது. வாரம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த கூட்டத்தில் நீல கிரி மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா எனவும், விதிமுறைகள் மீறி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, இதுவரை விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட 48 கட்டிடங்கள் கண்டறி யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விதிமு றைகள் மீறி பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, இதனை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிராமப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். வரும் காலங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்ப டுத்தப்படும். விதிமுறைகளின் மீறி கட்டுமானப் பணிகள் யாரே னும் மேற்கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்துள்ளார்.
தீக்கதிர் செய்தி எதிரொலி பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம்
தீக்கதிர் செய்தி எதிரொலி பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம் தருமபுரி, பிப்.8- நல்லம்பள்ளி அருகே சேதமடைந்து, எலும்புக்கூடு போல் காணப்பட்ட 2 மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்க ளை மின்வாரிய ஊழியர்கள் அமைத்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், ஒட்டப்பட்டி, சத்யா நகர் பேருந்து நிறுத்தம் அருகே 2 மின்கம்பங்கள் பழுத டைந்து எலும்புக்கூடு போன்று காணப்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் என மக்கள் அச்சமடைந்து வந்தனர். இதுகு றித்து தீக்கதிரில் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து மின்வாரியம், பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு 2 புதிய மின்கம்பங்களை அமைந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தீக்கதிர் நாளிதழுக்கும், மின்வாரிய அலு வலர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.