districts

img

2 ஆவது நாளாக விதொசவின் காத்திருப்புப் போராட்டம்

தருமபுரி, ஜன.31- இட்லப்பட்டி கிராம மக்களின் அடிப் படை கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அரூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது இட்லப் பட்டி கிராமம். இங்கு 250க்கும் மேற் பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட போயர் சமூக குடும்பங்கள் உள்ளன. இவர்கள்  கல்லுடைப்பது, கிணறு வெட்டும் பணி  உள்ளிட்ட தினக்கூலி வேலை செய்து  வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இக் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறைகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர். இதுவரை இவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப் படவில்லை. இம்மக்களுக்கென சுடுகாட் டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சாதி ஆதிக்க சக்தியினர் ஆக்கிரமிப்பு செய் துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுக ளாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க வில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர் வட்டாட்சியர் வட் டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சி யர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி பொதுமக்கள், அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று காத்திருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டம் 2 ஆவது நாளாக புதனன்றும்  தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் லெனின், ஒன்றியத் தலை வர் ஜடையாண்டி, ஒன்றியச் செயலா ளர் கே.குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், ஒன்றியச் செயலா ளர் ஏ.குமார், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.மல்லிகா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.என்.ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.