districts

img

பரிமளா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கிடுக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சிஐடியு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உயிரிழந்த பரிமளா வின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ.12 ஆயிரத்து 600 நிதி வழங்கப்பட்டது. இதில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, நகரமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, வையாபுரி, சிஐடியு ஒன்றிய நிர்வாகிகள் வேலுச்சாமி, கனகராஜ், சண்முகம், பாபு, நடராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பழனிச்சாமி, சாமியப்பன், தீண்டாமை ஒழிப்பு ஒன்றிய நிர்வாகி முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

திருப்பூர், மே 30– கந்துவட்டி கொடுமையால் தற்கொலை  செய்து கொண்ட அவிநாசி சுகாதாரப் பணியாளர் பரிமளாவின் குடும்பத்தா ருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், துணைச் செயலாளர் சி.கே.கனகராஜ், ஜி. சம்பத் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: அவிநாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்த ச.பரிமளா கந்துவட்டிக்காரர்கள் தன சேகரன், பூவாத்தாள் ஆகியோரின் மிக கடு மையான வசைசொல் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற் கொலை செய்து கொண்டார். அவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். மகன் சுதேசி (14) 9 ஆம் வகுப்பி லும், மகள் தேவதர்சினி (12) 7 ஆம் வகுப்பி லும் படித்து வருகின்றனர். பட்டியலின மக் கள் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீட் டுத் தொகை வழங்க வேண்டும். கடந்த 24ஆம் தேதி நடத்திய பேச்சுவார்த் தையில் கோட்டாட்சியர் பண்டரிநாதன் மறு நாள் (மே 25) காலை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விடும் என உறுதிய ளித்தார். ஆனால் வழங்கப்படவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இது குறித்து அறிக்கை அளிக்க வற் புறுத்தப்பட்டது. ஆனால் நிகழ்வு நடந்து 8 நாட்கள் கடந்த பின்னும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. அரசு நிர்வாகத்தின் மீது எளிய மக்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க, உடனடியாக பரிமளா குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அத்துடன் கருணை அடிப்படை யில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட பின் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்,ஓரிரு நாளில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தெரிவித்த னர்.