இளம்பிள்ளை, மே 11- இளம்பிள்ளையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கள் , மருத்துவர்கள் தங்க இடவசதி இல்லாததால் தவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அவசர மருத்து தேவைக்காக பயன்படுத்தப்படும் 108 ஆம்பு லன்ஸ் ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவர் களுக்கு ஓய்வறை இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வண்டியினை பகல் நேரங்களில் சாலை ஓரத்தில் நிறுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் ஆரம்பம் சுகாதார நிலையத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறையில் தங்க வேண்டிய அவல நிலை ஏற் பட்டுள்ளது. இந்த 108 வாகன ஒட்டுனர், மருத்துவ பணி யாளர்கள் தங்குவதற்கு இளம்பிள்ளை காவல் ்உதவி மையம்அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திலோ அல்லது பெருமாகவுண்டம்பட்டி பகு தியில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத் தினையோ இவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.