பொள்ளாச்சி, ஜூலை 5- திருநங்கைகளுக்கு சுய தொழில் புரி வதற்கு மானியத்துடன் கடன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் திருநங்கை களுக்கான குறைதீர்ப்பு முகாமில் வலியு றுத்தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காவலர் திருமண மண்டபத்தில் திருநங்கை களுக்கான குறைதீர் கூட்டம் செவ்வாயன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற் றது. இதில், கோவை மாவட்ட சமூக நலத் துறை இளநிலை உதவியாளர் மலர்விழி, மாவட்ட எய்ட்ஸ் திட்ட மேலாளர் கோபால கிருஷ்ணன், கோவை மாவட்ட சமூக நலத் துறையின் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஜெனிபர், சகோதரி பவுண்டேஷன் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற் றனர். இம்முகாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரு நங்கைகள் கலந்து கொண்டு,
தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக் களை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி சார் ஆட்சியர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ், அனைவரின் மனுக்கள் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். வீடு கட்டுவதற்கான வங்கி கடன்கள் மற்றும் நிலப்பட்டா, தொழில் செய்வோருக்கான சுய உதவி கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா வாரியாக திருநங்கைகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். இம்முகாமில் பங்கேற்ற சகோதரி பவுண் டேஷன் அமைப்பின் நிறுவனர் கல்கி சுப்ர மணியம் கூறுகையில், கோவை மாவட்டத் திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால் பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதி களில் 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள், பல வருடங்களாக வீடுகளின்றி வாடகை வீடு களிலும், குடிசைப் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான வங்கிக்கடன் அரசு ஏற்பாடு செய்ய வேண் டும். 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைக ளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தேசிய மற்றும் மாநில திருநங்கைகளுக்கான நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் மானியத்துடன் கட னுதவி வழங்க வேண்டும். ஒரு சதவிகித இட ஒதுக்கீடு மூலமாக பணி ஆணைகள் வழங்க வேண்டும். திருநங்கைகளுக்கான கல்வி மையம் அமைக்க வேண்டும், என்றார்.