districts

img

கருமந்துறையில் காபி வாரியத் துணை அலுவலகம்

சேலம், பிப்.3- கருமந்துறை மலைப்பகுதியில் காப்பி  வாரியத் துணை அலுவலகம் அமைக்க வேண் டும் என தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலை வர் குஞ்சு முகமது தலைமையில் சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், சேலம் மாவட்டம், கருமந் துறை மலைப்பகுதியில் தமிழக அரசு காப்பி  வாரியத் துணை அலுவலகம் அமைக்க வேண் டும். காபி கொட்டையை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி, பெரு முதலாளி களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே, காபி விவசாயிகளிடம் அரசு நேரடி யாக காப்பி கொட்டையை கொள்முதல் செய்ய வேண்டும். வனவிலங்குகளால் உயிரி ழப்பு நிகழும் போது தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித் துள்ளது. அதை ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய இணைச்செயலா ளர் யோகண்ணன், அகில இந்திய துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச்செய லாளர் எம்.செல்லையா உட்பட ஏற்காடு, சேர் வராயன் மலை, நீலகிரி, கொல்லிமலை காபி  விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.