தருமபுரி, ஜூலை 13- வரையறுக்கப்பட்ட ஊதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் என பட்டு வளர்ச்சித்துறை அலுவ லர் சங்க மாநில செயற்குழு வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், சிஐடியு தரும புரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. சங்கத் தின் மாநிலத் தலைவர் வி.வெங்க டேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வி.விநயா வரவேற்றார். மாநில பொதுச்செய லாளர் என்.சுரேஷ்குமார், மாநிலப் பொருளாளர் சி.கல்யாணசுந்தரம் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தருமபுரி மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஸ்ரீநாத் ஆகியோர் உரையாற்றி னர். மாநில துணைத்தலைவர்கள் எஸ்.ஹேமநந்தினிதேவி, எஸ்.உத யகுமார், கே.ஆர்.ராஜ்குமார், மாநி லச் செயலாளர்கள் ஜி.ராஜா, ஆர். சரவணன், எம்.விஸ்வநாதன் உட் பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பட்டுவளர்ச் சித்துறையில் உள்ள 70 சதவிகிதத் திற்கும் மேற்பட்ட, இளநிலை பட்டு ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். விவசா யிகளின் நலன்கருதி நடவு மானி யம் மற்றும் புழு வளர்ப்புமனை மானிய தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். பட்டுப்பண் ணைகளின் உட்கட்டமைப்பு வச தியை மேம்படுத்துவதற்காக கூடு தல் நிதியை ஒதுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியம் மற்றும் பணிக் கொடை வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியிடங்களுக் கும் பதவி உயர்வு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.