சேலம், டிச.25- மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு நடை முறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக் கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட 16 ஆவது மாநாடு, சேலம் மீனாட்சி ரங்கநாதன் ஹாலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, சூரமங்கலம் கிளைத் தலை வர் சிற்றரசு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முனைவர் எஸ்.ஆர். சேதுராமன், மாநில பொதுக்குழு உறுப் பினர் ஷாகீரா, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் கே.பி.சுரேஷ் குமார், மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும். நலவாழ்வு சட்ட உரிமையை (Right To Health) அரசு கொண்டு வர வேண் டும். பேரிடர் உருவாவதற்கான காரணங்களை பற்றிய விழிப் புணர்வை பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக செங்கோட்டுவேல், செயலா ளராக சுரேஷ், பொருளாளராக பிரபாவதி உள்ளிட்ட நிர்வா கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் திரளானோர் பங் கேற்றனர்.