districts

img

பதவி உயர்வு வழங்க சமூகநலத்துறை பணியாளர்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 15- பதவி உயர்வு வழங்க வேண்டும்  என அரசு சமூகநலத்துறை பணியா ளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை பணியாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம், சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி. ஆர்.ஸ்டாலின் வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வானை சிறப் புரையாற்றினார். முன்னாள் மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புக ழேந்தி, முன்னாள் துணைத்தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். இக்கூட்டத்தில், பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும்.

அங்கன்வாடியில் இருந்து சமூகநலத்துறைக்கு பணிநியமன முறையில் செய்த பணியாளர்கள் மேற்பார்வை நிலை-1, சமூகநல விரி வாக்க அலுவலர் மேற்பார்வையா ளர் நிலை - 2, ஊர்நல அலுவலர் ஆகி யோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சமூகநலத்துறையில் பணியாற்றும் ஆண் கண்காணிப்பா ளர்கள், அலுவலர் மற்றும் பணியா ளர்களுக்கு உரிய காலத்தில் பணி வரன்முறை செய்து பதவிஉயர்வு வழங்க வேண்டும். துறை விரிவாக் கத்தின் போது அனைத்து நிலை பணி யாளர்களுக்கும் பதவி உயர்வை பகிர்ந்தளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக வி. பழனிச்சாமி, மாவட்டச் செயலாள ராக வி.ஆர்.ஸ்டாலின், மாவட்டப்  பொருளாளராக வினோத், துணைத் தலைவராக ஆர்.தெய்வானை, இணைச்செயலாளராக தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.