ஈரோடு, ஜன.29- குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டுமென சிஐ டியு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் சங்க அலு வலகத்தில் ஈரோடு கிளையின் தலை வர் சுரேஷ் பாபு தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட செயலா ளர் எச்.ஸ்ரீராம் தொடக்க உரையாற்றி னார். செயலாளர் மு.சங்கரன், பொரு ளாளர் கோபிநாத் ஆகியோர் வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக் கையை முன்வைத்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்யநாராயணன் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கத்தின் போராட்ட வாழ்வி னையும், அகில இந்திய சம்மேளனத் தின் வைரவிழா தொடக்கத்தின் முக் கியத்துவத்தையும் விளக்கி உரை யாற்றினார். இப்பேரவையில், மருந்து விற் பனை பிரதிகளுக்கென்று குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் என் பதை அமல்படுத்த வேண்டும். அதற் கான சட்டத்தை கொண்டு வர தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இதுதொடர்பான உயர்நீதிமன் றத்தில் உள்ள வழக்கில் உறுதியாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட வேண் டும். இந்த வழக்கில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கம் தன்னையும் பிரதிவாதி யாக இணைத்துக் கொண்டு அதற் கான முயற்சிகளை எடுக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு கிளையின் தலைவராக சுரேஷ்பாபு, செயலாளராக மு.சங்க ரன், பொருளாளராக கோபிநாத், துணைச்செயலாளராக கவின் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.