ஈரோடு, டிச. 25- அதிக மனுக்கள் வரும் இடங்களுக்கு கூடுதல் அளவர்கள், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவ டிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. மு.ரவி தலைமை வகித்தார். கௌரி சங்கர் வரவேற் றார். மாநில தலைவர் ஜெ.ராஜா, பொது செயலாளர் அண்ணா குபேரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சா.விஜயமனோகரன், நில அளவை ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் வெ.சுந்தரலிங்கம் மற்றும் வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் அதிகப்படியான மனுக்கள் வரும் இடங்களுக்கு கூடுதல் அளவையர்களை நியமிக்க வேண்டும். சர்வேயர்களை அதிகப்படியான சந்திப்பு கூட்டம், ஆன்லைன் கூட்டம் ஆகிய வற்றை தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை கூட்டம் என்பதை 15 நாட்களுக்கு ஒருமுறை என மாற்றி நடத்த வேண்டும். உதவியாளர் காலிப்பணியிடங்களை அவுட் சோர்சிங் முறையை தவிர்த்து, நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள பயணப்படியினை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட தலைவராக கௌரி சங்கர், மாவட்ட செயலாள ராக விஜயராஜன், மாவட்ட பொருளாளராக கண்ணபிரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு கோட்ட தலைவராக சந்திரகுமார், செயலாள ராக குமரேசன், பொருளாளராக கோபி, கோபி கோட்ட தலைவராக முத்துராஜ், செயலாளராக கார்த்தி, பொருளா ளராக சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.