கோவை, ஆக.31- குடிநீர் வாரியத்தில் அவுட் சோர் சிங் முறையை கைவிட்டு, சுகாதார மான பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வாரியமே பராமரிப்புப் பணிகளை நிர்வகிக்க வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய தொழிலாளர்கள் சங் கத்தின் 43 ஆவது மாநாடு, மகாசபை சூலூர் கலங்கல் சாலை யில் உள்ள புத்ததேவ் பட்டாச் சார்யா நினைவு அரங்கில் (எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபம்) சனியன்று நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மாநாட்டு கொடியை ஏற்றிவைத்து தலைமைஏற்றார். அஞ்சலி தீர்மா னத்தை இணைச் செயலாளர் எம்.சசிகுமார்முன்மொழிந்தார். உதவித் தலைவர் சக்திவேல் வர வேற்று பேசினார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன் உரையாற்றினார். இதனைத்தொ டர்ந்து, சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் சரவணனும், வரவுசெலவு அறிக் கையை பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர். அறிக்கையின் மீதான பிரதிநிதிகள் விவாதத்தை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதில், குடிநீர் வடிகால் வாரி யத்தில் உள்ள ஒப்பந்தத் தொழிலா ளர்களை நிரந்தரமாக்க வேண்டும், காலிப் பணியிடங்கள் அனைத்தை யும் நிரப்ப வேண்டும், பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படை யிலான பணி வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் நியமிக்கப் பட்ட பணியாளர்களுக்கு கல்வி தகு திக்கு ஏற்ப பதவிகளை வழங்க வேண்டும். எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்துள்ள மின்பணியாளர்க ளுக்கு கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவி களை வழங்க வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு சுகாதாரமான பாதுகாக் கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகை யில் வாரியமே பராமரிப்புப் பணி களை நிர்வகிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போலவே அகவிலைப்படி உயர்வை வாரிய பணியாளர்க ளுக்கும் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் உதவித் தலைவர் பாலகுமார், மத் திய அமைப்பின் உதவித் தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில், புதிய தலைவராக பிரான்சிஸ், செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் சசிக்கு மார் உள்ளிட்ட 8 துணை நிர்வா கிகள் மற்றும் 16 பேர் கொண்ட நிர் வாகக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, சிஐ டியு கோவை மாவட்டக்குழுவிற்கு ரூ.50 ஆயிரத்தை, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட் டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலச்செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். மாநாட்டில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பிரநிதிகளாக பங்கேற்றனர். முடிவில், சங்க நிர்வாகி பிலிப்ஸ் நன்றி கூறினார்.