தருமபுரி, ஆக.20- கறிக்கோழி வளர்ப்போருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண் டும் என, கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின், தருமபுரி மாவட்ட முதல் மாநாடு தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் செவ்வாயன்று, மாவட்ட அமைப்பாளர் ஆ.ஜீவானந் தம் தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் எம்.குப்புசாமி, செல் வம், சி.அன்பரசு, சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் கே.பி.பெருமாள் சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில், கோழி வளர்ப்பு விவசாயிகள், ஏற்று மதியாளர்கள் நலன் கருதி தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்போ ருக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். வங்கிக்கடன் வழங்க வேண்டும். கறிக்கோழி விவ சாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் கோழித் தீவனம் வழங்க வேண்டும். விலை வாசி உயர்வு, இடுபொருள் விலை உயர்வு, ஆள் கூலி இவைகளை கணக்கில் கொண்டு 1 கிலோ கோழி வளர்ப்புக்கு கூலி ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். போக்கு வரத்து காவல் துறை, கோழி ஏற்றுமதி செய்யும் வண்டிகளை பிடித்து அபரா தம் விதிக்கக்கூடாது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்ட துணைத்தலைவர் கே.என். மல்லையன், மாவட்டப் பொருளா ளர் சி.வஞ்சி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக எம்.குப்புசாமி, செயலாளராக ஆ.ஜீவா னந்தம், பொருளாளராக டி.செல்வம், துணைத்தலைவராக சிவஞானம், துணைச்செயலாளராக பாலசுப்பி ரமணியம் மற்றும் 11 மாவட்டகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.