districts

புலி நடமாட்டம்? மக்களின் அச்சத்தை போக்க வலியுறுத்தல்

ஈரோடு, நவ.14- பவானி அருகே உள்ள ஆப்பக் கூடல் பகுதியில் சிறுத்தை நடமாடுவ தாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் பரவி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா செய லாளர் எஸ்.மாணிக்கம், மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது, ஆப்பக்கூடல் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக காவல் துறை யினர், கண்காணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளைப் பார்த்து கொண்டி ருந்தனர். அத்துடன் அந்த காணொளி காட்சிகளில், சிறு மரத்தில் கட்டி வைக் கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடுவதைப் போன்ற பதிவு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டோம். ஆப்பக்கூடல் விஜயா  நகர் பகுதியில் இரவு நேரத்தில் ஒரு  விலங்கு சாலையைக் கடந்தது. அதன் முன்பகுதி சிறுத்தையைப் போல இருந் தது. ஆனால், பின்பகுதியைப் பார்த்து சிறுத்தை என்பதை உறுதி செய்ய முடி யவில்லை. வனத்துறையினர் மூலம் ஆய்வு செய்ததில் பதிவான காட்சியில் இருப்பது நாய் என்று தெரியவந்தது என்று கூறினர். சின்னபுலியூர், பெரிய புலியூர், ஆப்பக்கூடல், ஒரிச்சேரிபுதூர், ஜம்பை, தளவாய்பேட்டை, பெரிய மோளபாளையம், பெருமாபாளையம் போன்ற பகுதிகளில் சிறுத்தை நட மாட்டம் குறித்து மக்கள் அச்சமடைந் துள்ளனர். இரவு நேரங்களில் சாலை ஓரத்தி லும், வயல்வெளியிலும் பார்த்ததாக வும் சிலர் கூறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்படக் கூடும். ஆகவே மாவட்ட நிர்வா கம் தலையிட்டு பொதுமக்களுக்கு அச் சத்தை போக்கும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.