districts

img

எல்ஐசி முகவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் எல்ஐசி முகவர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 6– எல்ஐசி முகவர்களுக்கு மாத ஊதியம் ரூ 25 ஆயிரம் வழங்க வேண் டும் என அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 5  ஆவது  மாநாடு தருமபுரி  நரசிம்ம  ஆச்சாரி தெருவில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜே.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற மாநாட் டில் இணைச்செயலாளர் ஜி.சிரிதரன் வரவேற்றார். சிஐடியு மாநில செயலா ளர் சி.நாகராசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். செயலா ளர் வி.அப்பாவுதுரை வேலை அறிக் கையும், பொருளாளர் எல்.எஸ்.தட்சி ணாமூர்த்தி வரவு செலவு அறிக்கை யும் முன்வைத்தனர்.கோட்ட செயலா ளர் கே.சிவமணி, மாவட்ட தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றினர். காப்பீட்டு ஊழியர் சங்க கோட்ட  இணைச்செயலாளர் ஏ.மாதேஸ் வரன் வாழ்த்தி உரையாற்றினர்.

இம்மாநாட்டில், குழு காப்பீடு செய் வதை வயது வரம்பு நீக்கி ரூ.25 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும்.பணிக் கொடை கணக்கீட்டை மாற்றி முதலா மாண்டு கமிஷனையும் கணக்கில் சேர்க்க வேண்டும். எல்ஐசி முகவர்க ளுக்கு மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து முகவர் களுக்கும் பெட்ரோல் அலவன்ஸ், பயணப்படி வழங்க வேண்டும். மன்ற  முகவர்களுக்கு மெடிகிளைம், அடை யாள அட்டை வழங்க வேண்டும். பாலிசி ஆவணங்களுக்கு ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக ஜே.ரமேஷ் குமார், செயலாளராக ஜி.சிரிதரன், பொருளாளராக எல்.எஸ்.தட்சணா மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முடிவில், எல்ஐசி முகவர் கள் சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் தாமோதரன்‌ நிறைவுறையாற்றி னார்.