திருப்பூர், ஜூன் 28- திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் கள் நியமனம் செய்வதுடன், கழிப்பறை களை தூய்மைப்படுத்த போதிய பணி யாளர்கள் நியமிக்க வேண்டும் என்று மாமன்றக் கல்விக்குழுத் தலைவர் வலி யுறுத்தினார். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பூர் மாநக ராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் பேசுகையில், இந்த 4 மாத காலத்தில் செய்த பணிகள் குறித்துப் பேசினார். இதையடுத்து கல்விக்குழுத் தலை வர் திவாகர் பேசுகையில், 60 வார்டுகள் உள்ள திருப்பூர் மாநகராட்சியில் 140 பள்ளிகள் உள்ளன. பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புப்படி 33 மாணவ, மாண விகளுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண் டும். ஆனால் திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் போதுமான அளவு கழிப்பறைகள் இல்லை. மேலும் இருக்கும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லை என்று கூறி னார். மேலும் இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசியதாவது: தூய்மைப் பணியாளர்கள் ஓய்வு பெற்று பல மாதங் கள் ஆகியும் பலருக்கு ஓய்வூதியம் இன் னும் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண் டுகளாக வரி விதிப்பு தெளிவில்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு உள்ளிட்டவைகள் பெறுவதில் சிக்கல் உள்ளது. பில் கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டால் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளிப்பதில்லை. மாமன்ற உறுப்பினர் களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். பல பகுதிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடி தண்ணீர் கிடைக்கிறது. நான்காவது குடி நீர் திட்டம் முழுமையாத நிறைவடைந் தும் தண்ணீர் விநியோகம் செய்வ தில் சிக்கல் நிலவுகிறது. மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் இந்த காலகட்டத் தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர் கள் நியமிக்கப்படாததால், சுகாதார நிலையங்கள் பூட்டி உள்ளது. போது மான மருத்துவர்கள் நியமித்து ஆரம்பம் சுகாதார நிலையங்களை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்காத சூழல் நிலவும் நிலையில். தூய்மைப் பணிக் காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் விபத்துக்குள்ளானால் தூய்மைப் பணி யாளர்களின் மூன்று மாத ஊதியம் பிடித்துக் கொள்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. கட்டுப்படுத்த உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலை பணிகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் மாமன்ற உறுப்பினர்களை மதிப்ப தில்லை. வார்டு பகுதிகளில் நடைபெ றும் திட்டப் பணிகள் குறித்தும் தகவல் அளிப்பதில்லை என தெரிவித்தனர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலை வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த னர். மாநகர மேயர் பதிலளிக்கையில், புதிதாக 223 வகுப்பறைகள் கட்டப்பட் டுள்ளது, 19 கழிப்பறை கட்டப்பட்டுள் ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூய் மைப் பணியாளர்களின் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.