கோவை, ஜூன் 22- சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக் கப்பட்ட குடிநீர் விநியோக ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும் என மாதர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16 ஆவது கோவை மாவட்ட மாநாடு மேட்டுப்பாளை யத்தில் செவ்வாயன்று மாவட்ட தலைவர் வனஜா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா உரையாற்றினார். இதில், மாதர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.சாவித்திரி, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் கே.எஸ்.கனகராஜ், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் எம். தினேஷ் ராஜா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், ரேசன் கடை களில் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உள் விசாரணைக் கமிட்டியை உடனடி யாக அமைக்க வேண்டும். பெண் கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் களாக உள்ள தூய்மை பணியாளர் கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும். கோவை மாநகராட்சி சூயஸ் என் னும் வெளிநாட்டு தனியார் நிறுவ னத்துடனான குடிநீர் விநியோக ஒப் பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். காவல் நிலையங்களில் புகாரளிக்க வரும் பெண்களை அலைக் கழிப்பு செய்வதை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்ட தலைவராக சி.ஜோதிமணி, செயலாளராக டி.சுதா, பொருளாள ராக உஷா மற்றும் துணை தலைவர் களாக ராஜலட்சுமி, தங்கமணி, சாமுண்டீஸ்வரி, அ.ராதிகா, ஆர்.வனஜா ஆகியோரும், துணை செய லாளர்களாக சாந்தா, மெகபு நிஷா, அமுதா, ரேவதி, ஜீவாமணி ஆகி யோர் உட்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, அ.ராதிகா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இதில், ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.