districts

img

பெற்றோரை அரவணைத்துப் போற்றுங்கள் கல்லூரியில் ஆட்சியர் அறிவுறுத்தல்

திருப்பூர், டிச.15- வயது முதிர்ந்த பெற்றோரை அரவ ணைத்துப் போற்றுங்கள், நட்பை நேசியுங் கள் என, திருப்பூரில் நடைபெற்ற அரசு கலை  கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாவட்ட  ஆட்சியர் மாணவிகளுக்கு வலியுறுத்தினார். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல். ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி 17 துறை களுடன் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி யில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமளிக்கும் விழாவானது வெள்ளியன்று நடைபெற்றது. 33 ஆவது பட்டமளிப்பு விழா வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர்  கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற  மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி னார்.  இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்  தா.கிறிஸ்துராஜ், பள்ளி மற்றும் கல்லூரி பரு வம் தான் எப்போதும் நம் வாழ்வில் அதிக  மகிழ்ச்சியை தரக்கூடியது எனவும், மகிழ்ச்சி யான நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள்  எனப் பேசினார். மேலும் பள்ளி மற்றும்  கல்லூரிகளில் கிடைத்த நம்பகத்தன்மை யான நட்பை நேசித்து நாம் எந்த உயரத்திற்குச்  சென்றாலும் அதனை நினைவில் கொள்ள வேண்டும் எனவும், நாம் கல்வி பயின்று பட்டம்  பெரும்போதும், வாழ்க்கையின் அடுத்த கட் டத்திற்கு செல்லும் போதும் நம்மை விட நம்  பெற்றோர்களே அதிக பெருமையை அடைவ தாகவும், அவர்களை நாம் என்றும் மறவாமல்  வயது முதிர்ந்த பெற்றோர்களை அரவ ணைத்து போற்ற வேண்டும் எனப் பேசினார்.  இதனைதொடர்ந்து மாணவிகளுக்கு கல்வி  சான்றிதழை வழங்கினார்.