ஈரோடு, அக்.29- தலமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக ரித்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கை உடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடியில் இருந்து திம்பம் செல்லும் வனச்சாலையை யானைகள் கூட்டம் கூட்ட மாக கடந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையோடு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘யானைகள் அடிக்கடி தலமலை வனச்சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை மிக மெதுவாக இயக் குவதுடன், யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் செய்யாமல் வாகனங்களை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.