districts

img

குந்தா அணையை தூர்வார மின்ஊழியர்கள் வலியுறுத்தல்

உதகை, ஆக.25- சேறும், சகதியும் நிறைந்துள்ள குந்தா அணையை தூர்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மின்வா ரிய ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், குந்தா மற் றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பர்பவானி, அவ லாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக் காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணை களில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் 833.65 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கிறது. இந்நிலையில், குந்தா நீர் மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையிலிருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர், மின்சார உற்பத்திக்கு பின் அவ லாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன்பின், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர்  குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு  சென்று, அங்கு 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற் பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர், குந்தா அணையில் தேக்கி வைக்கப்படு வதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டு, அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கெத்தை மின் நிலையத்திலிருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப் படும் நீர், மீண்டும் சுரங்கப்பாதை வழி யாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு, அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இத னால் குந்தா, கெத்தை மற்றும் பரளி  மின் நிலையங்களில் மின்சார உற்பத் திக்கு முக்கிய நீர் ஆதாரமாக குந்தா  மற்றும் கெத்தை அணைகள் உள்ளன.  இந்நிலையில், குந்தா, கெத்தை அணை களை தூர்வராததால் சேறும், சகதி களும் நிறைந்துள்ளது. மேலும், மழைக் காலங்களில் நீர் வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடி, மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணைகளில் கலக்கிறது. இதனால், மேற்படி அணை களில் 50 சதவிகிதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. இதனால், குறைந்தபட்ச மழை பெய் தாலே அணைகள் நிரம்பி விடுகின்றன. மேலும், சேறும், சகதிகளால் குந்தா  அணையில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால், கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு,  மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாய மும் உள்ளது. எனவே, குந்தா அணையில் தேங்கி யுள்ள சேறு, சகதிகளை அகற்றி,  அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழி யர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.