டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தருமபுரி, ஆக 5- புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, நல் லாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஆதனூர் – மாங்கரை பிரிவு சாலையில், புதிய அரசு டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆதனூர் பகுதியில், ஏற்கனவே கடந்த ஆண்டு டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்தபோது, பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால், டாஸ் மாக் கடை திறப்பது கைவிடப்பட்டது. தற்போது, மீண்டும் டாஸ்மாக்கை திறக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவ தால், அப்பகுதியில் உள்ள, பள்ளி கல்லூரி மாணவ, மாண விகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். எனவே, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் திறப்பதை அரசு கைவிட வேண்டும் என மனு அளித்தனர்.
இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்
கோவை, ஆக. 5- கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் செவ்வாயன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு கள் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்கு பெட்டி மற்றும் வாக்களிப்பதற்கான இடம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தேர்தல் செவ் வாயன்று நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 வார்டுக ளில் திமுக கூட்டணி கட்சியினர் கவுன் சிலர்களாக இருக்கின்றனர். ஒரு வார் டில் எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலரும், மூன்று வார்டுகளில் அதிமுக கவுன்சி லர்களும் உள்ளனர். திமுக கூட்டணி பலம் வாய்ந்த அணி யாக இருக்கும் நிலையில், திமுக வேட் பாளராக 29 ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்வு செய்தனர். இதில், அமைச் சர்கள் கே.என்.நேரு, சு.முத்துச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சியில் செவ்வா யன்று காலை ரங்கநாயகி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதனைய டுத்து தேர்தல் நடைபெறும், ரங்கநா யகி போட்டியின்றி தேர்வு செய்யப் படவே அதிகப்படியான வாய்ப்பு உள் ளது. வேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால், தேர்தல் நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தேர்தலுக்கான வாக்குபெட்டி, வாக்கு பதிவு செய்யும் இடம், வாக்கு எண்ணிக்கைக்கான டிரே உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. வாக்கு களை எண்ணுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களிப்பதற்கு தேவையான பந்தல்களும் அமைக்கப் பட்டுள்ளது.
பால் கொள்முதலில் முறைகேடு
தருமபுரி, ஆக-5, ஆவின் மூலம் பால் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி விவசாயிகள் பால் கேன்களுடன் வந்து திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெர மாண்டபட்டி கிராமத்தில் 25 ஆண்டுகளாக தமிழக அரசின் பால் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இந்த நிலையத் தில் பணிபுரியும் ஊழியர் சிவக்குமார் என்பவர் பால் கொள் முதல் செய்யும் பொழுது பாலின் தரம் குறைவாக உள்ளதாக கூறி ஒரு லிட்டர் பாலுக்கு ருபாய் 10 வரை குறைத்து பணம் வழங்கி வருவதாகவும், போலி கணக்குகள் மூலம் முறைகேட் டில் ஈடுபட்டு வருவதாகவும் மனு அளித்துள்ளனர். முன்னதாக, இந்த முறைகேடு குறித்து பல முறை தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, பெரமாண்டபட்டி பால் உற்பத்தியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கேனில் கொண்டு வந்த பாலை கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.