districts

மக்களவை தேர்தல் களம் - இன்று முதல் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல்

இந்திய தேர்தல் ஆணையம் 2024 ஆம்  ஆண்டிற்கான மக்களவை பொதுத்தேர்த லுக்கான தேர்தல் அட்டவணையை அறி வித்துள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் புதனன்று (இன்று)  தொடங்கவுள்ளது. அதேபோன்று, மார்ச் 27 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வ தற்கான கடைசி நாளாகும். இதற்கான வேட்பு மனு பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி  மேற்கொள்ளப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்  மார்ச் 30 ஆம் தேதியாகும். வேட்பு மனுவினை வேட்பாளர் அல் லது அவரை முன்மொழிபவர் நேரிலோ அல்லது https://suvidha.eci.gov.in (Suvidha Portal) என்ற இணைய வழி மூல மாக தாக்கல் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் /  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சேலம், மேற்கு வட்டாட்சியர் அலு வலகத்தில் புதனன்று (இன்று) காலை 11  மணி முதல் மாலை 3 மணி வரையில், மார்ச்  27 ஆம் தேதி வரையில் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்களில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்  வேட்பாளரின் கான்வாய் அல்லது அவரு டன் வரும் அதிகபட்சம் மூன்று வாகனங் கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய் யப்படும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உட்பட 5 நபர் கள் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனு மதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய் யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிர மாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான இதர விவரங்களை www.eci.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.