districts

img

சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு!

நாமக்கல், மார்ச் 30- நாமக்கல் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள வாரச் சந்தையில், நேர்மையான முறையில் 100 சதவிகிதம் வாக்க ளிக்க வேண்டும் என வலியுறுத்தி, காய்கறிகள் வாங்க  வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு, விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர். மேலும்,  சந்தைக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும்  கனரக வாகனங்களில் தேர்தல் சம்பந்தமான விழிப்புணர்வு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது. இந்நிகழ்வில், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நகராட்சி ஆணையர் சென்னு  கிருஷ்ணன், ரெட்கிராஸ் மாவட்ட செயலர் சி.ஆர்.ராஜேஸ் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.