உடுமலை, ஜன.5- கூட்டு குடிநீர் பராமரிப்பு பணியை தனியா ருக்கு கொடுத்து அவர்களின் அலட்சியத் தால், அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வீணாவது அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. திருமூர்த்தி அணையில் இருந்து உடு மலை நகராட்சி, மடத்துக்குளம் மற்றும் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு கூட்டுகுடி நீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணை யில் போதிய தண்ணீர் இருந்தாலும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்படுப்பாடு ஏற்பட்டு வதால் தினமும் எதாவது ஒரு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கணக்கம்பாளையம் கூட் டுகுடிநீர் திட்டத்தின் குழாய்கள் உடைத்து தண்ணீர் வீணாகி வருவது அனைவரையும் வேதனையடையச்செய்துள்ளது. இந்த குழாய் கள் உடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலான நிலையில் பல முறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது. இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களை கேட்ட போது, அணையில் இருந்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முன்பு வாரியத்தின் ஊழியர்கள் இருந்தார்கள். இதனால், சீரகாக குடிநீர் விநி யோகமும், பராமரிப்பும் முறையாக நடை பெற்று வந்தது. ஆனால், தற்பொழுது குழாய் களை பராமரிப்பு செய்ய மற்றும் குடி நீர் விநியோகம் செய்ய தனியார் நிறுவனங்க ளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அவர் கள் லபாத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு செயல்படுவதால், ஊழி யர்களின் எண்ணிக்கை குறைவாக வைத்துள் ளனர். இதனால், பாராமரிப்பு பணியில் மந்தம், விநியோகத்தில் பிரச்சனை என தொடர்ந்து வருகிறது. மக்களின் அடிப்படை தேவையான குடி நீர் வழங்குவதை சேவையாக கருத வேண் டிய அரசு, தனியார் நிறுவனங்களிடம் ஒப்ப டைப்பதால், லாப நோக்கில் செயல்படும் நிறு வனங்களிடம் ஒப்படைப்பதால் இந்த விளைவு ஏற்படுகிறது. திருமூர்த்தி அணை யில் இருந்து மக்களுக்கு தரப்படும் அனைத்து குடிநீர் விநியோகம் மற்றும் குழாய் பராமரிப்பு களை மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியமே நடத்தினால் மட்டுமே பிரச் சனை தீர்வு ஏற்படும், என்றனர்.