நாமக்கல், ஜூன் 11- கோடை விடுமுறை முடிந்த பின் தமிழகத் தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எழுது பொருட்கள் மற்றும் புத்தக பைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் அரசு பொது தேர்வுகள் நடைபெற்றது.
பின்னர் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனைய டுத்து, ஜூன் 10 ஆம்தேதி தமிழகத்தில் பள்ளி கள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள், குழந்தைகளுக்கு தேவை யான புத்தகப்பைகள், எழுது பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து பள்ளிபாளையம் - திருச் செங்கோடு சாலையில் கடைகள் அமைத்தி ருக்கும் வியாபாரிகள் கூறுகையில், பள்ளி கள் செயல்படும் நாட்களில் தினந்தோறும் பேனா, பென்சில், பேப்பர் மற்றும் கல்வி கற் பதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட் கள் தினந்தோறும் விற்பனையாகும். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஏதும் இல்லாமல் மந்த நிலை ஏற்பட்டது.
ஜூன் 10ஆம் தேதி பிறகு பள்ளிகள் திறந்த பிறகு, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்ப தற்காகவும் பெற்றோர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் கல்வி பயில பயன்படுத்தும் பாட புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் மஞ்சப்பை அல்லது கனமான பைகளை பயன்படுத்தி பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
தற்போது அந்த நிலை மாறி அனைத்து தரப்பினருமே தற்போது ஸ்கூல் பேக்குகளை பயன்படுத்து கின்றனர். தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்ப டும் நிலை ஏற்பட்டதால், புதிதாக ஸ்கூல் பேக்குகள் ஸ்டேஷ்னரியில் பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்ற னர். 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கான பேக்குகள் ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை தரத்தை பொறுத்து பேக்குகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்கூல் பேக்குகள், காலணிகள், ஸ்டேஷ்னரி பொருட்கள் உள் ளிட்டவை விற்பனை கணிசமாக அதிகரித் துள்ளது, என்றனர்.
இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர் ஒரு வர் கூறுகையில், கோடை விடுமுறை சுமார் இரண்டு மாதம் இருந்தது. அப்போதே மாண வர்களுக்கு தேவையான கல்வி உபகரணங் களை வாங்கியிருக்கலாம். இப்போது பள்ளி திறந்தவுடன் பெற்றோர்கள் கடைகளில் குவி வதால், அனைத்து கல்வி உபகரணங்களின் விலைகளையும் ஏற்றி விற்பனை செய்கின்ற னர். பெற்றோர்களின் உழைப்பை சுரண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தலை யிட்டு தடுக்க வேண்டும். நியாயமான விலை யில் பொருட்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
-எம்.பிரபாகரன்