districts

img

சேலத்தில் வட்டார அளவில் கல்விக்கடன் முகாம்

சேலம், செப்.11- சேலம் மாவட்டத்தில் கல்விக் கடன் தேவைப்படும் அனைத்து கல் லூரி மாணவ, மாணவியர்களும் எளி தாக பயன்பெறும் வகையில் புதிய  முயற்சியாக வட்டார அளவில் கல் விக்கடன் முகாம்கள் நடத்தப்படு கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத் தில் 2023 – 2024 ஆண்டில் 5,773 மாணவ, மாணவிகளுக்கு ரூ.89.01 கோடி கல்விக்கடன்கள் வழங்கப்பட் டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 7  ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.99 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் தேவைப்படும் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் எளிதாக பயன்பெறும் வகையில் புதிய முயற் சியாக வட்டார அளவில் கல்விக் கடன் முகாம்களை நடத்த திட்ட மிடப்பட்டது. அதன்படி, புதனன்று காடையாம்பட்டி வட்டம், பூசாரிப் பட்டி ஊராட்சியில் உள்ள ஆர்.பி. சாரதி தொழில் நுட்பக்கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடைபெற்றது. இம்முகாமில் காடையாம்பட்டி வட் டத்தில் உள்ள 8 வங்கிகள் கலந்து கொண்டன. 212 மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கான விண்ணப்பங் களை வழங்கினர். அதில் 12 பேருக்கு உடனடியாக வங்கிக்கடனுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன, மீத முள்ள விண்ணப்பங்கள் மீது ஒரு வார காலத்தில் நடவடிக்கை மேற் கொள்ள அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகத்தால் வரும் வெள்ளியன்று (நாளை) மகு டஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், காகா பாளையம் நாலேட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே வித் யாலஷ்மி மற்றும் ஜன்சமர்த் இணையதளங்களில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டு மல்லாமல், மேலும் புதிதாக கல்விக் கடன் பெற விரும்புபவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கும் வகையில் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு இம் முகாமானது நடத்தப்படுகிறது. எனவே, இக்கல்விக்கடன் மேளா வில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.