இளம்பிள்ளை, பிப்.28- இளம்பிள்ளை அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் கல்வி கண்காட்சி நடைபெற்றது. இல்லம் தேடி கல்வித் திட்டம் சார்பில் ஒற்றையால் விளை குறுவள மையத்தைச் சோ்ந்த தன்னார்வலர்ளுக் கான இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண் காட்சி, சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் சனியன்று நடைபெற்றது. இதில் 1 - 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தன்னார்வலர்கள், தங்கள் பயன்படுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை காட்சிப் படுத்தினர். மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பாடங் கள் கற்பிக்கும் முறை உளவியல் ஆலோசனைகள், ஐ.டி.கே செயலில் மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கோள்வது குறித்தும், கற்பித்தல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்து கிறோம் என்று விளக்கமளித்தனர். இதில், சிறந்த படைப்பு களை உருவாக்கிய மூன்று தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலாராணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி மற்றும் தன்னார்வலர் கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.