districts

img

எடப்பாடி பழனிச்சாமியின் கனவு பலிக்காது எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி

ஈரோடு, நவ.13- திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது, எடப்பாடி பழனிச்சாமியின் கனவு பலிக்காது என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின்  ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி யேற்றும் விழா செவ்வாயன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவா ஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒன்றிய அர சின் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து வரு கின்ற டிசம்பர் 6 ஆம் தேதியன்று தமிழகத்தில் 10 பெரு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வக்பு வாரிய சொத்துகள் இருக்க கூடாது என்ற நோக்கத்தில் வக்பு வாரிய  திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது, அடுத்த மாதம் பெங்களூ ருவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கூட்டம் நடை பெற இருப்பதால் அந்த கூட்டத்தில் வக்பு வாரிய திருத்த சட் டத்திற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட் டணி வெற்றி பெறும், எடப்பாடி பழனிசாமி கனவு பலிக் காது, என்றார்.