districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி இரவோடு இரவாக சீரமைக்கப்பட்ட சாலை

கோவை, டிச. 29- குண்டும், குழியுமான சாலையை  செப்பனிடாமல் ஓராண்டாய் மெத்த னம் காட்டிய கோவை மாநகராட் சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி  அறிவித்த போராட்டத்தின் எதிரொலி யாக இரவோடு, இரவாக சாலை சீரமைக்கப்பட்டது. கோவை புலியகுளம் முதல் சுங்கம் வரை பல்வேறு விதமான பணிகளுக்காக சாலைகள் தோண்டப் பட்டன. அவைகள் குண்டும், குழியு மாக கிடந்தது. அதில் பயணம் செய்யக்கூடிய வாகன ஓட்டிகள்  தினந்தோறும் தடுமாறி விழுந்து,  விபத்துக்குள்ளாகி படுகாயமடை வது அன்றாட நிகழ்வாக மாறியது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் பலமுறை மனு அளித் தும், முறையிட்டும் மாநகராட்சி அதி காரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்த னர். இதையடுத்து குண்டும், குழியு மான சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு செவ்வாயன்று மாலை அணிவித்து பாராட்டு தெரி விக்கும் நூதனப் போராட்டம் நடைபெ றும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  அறிவிக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் திங்களன்று இரவு புலியகுளம் முதல் சுங்கம் வரையிலான  பழுத டைந்த பகுதிகளில் தார்சாலை அமைத்தனர். இதையடுத்து சாலை சீரமைக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ், கிளை செயலாளர் டெம்போ நாகராஜ், ஆனந்தன், ஜெயம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.