districts

img

கழுகுகள் எண்ணிக்கை குறைகிறதா கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

 உதகை, பிப்.24- தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கழுகுகள் குறித்த கணக் கெடுப்பு பணிகள் இன்று (பிப்.25) தொடங்குகிறது என கழுகு பாதுகாப்பு  குழுவினர் தெரிவித்தனர். உயிரிழந்த உயிரினங்களை இரை யாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தி யாவில் குறைந்து வருகிறது. 1990ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள்  தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட் டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும்,  வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதி களில் மட்டுமே காணப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில்  கழுகுப் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட மாநில அளவிலான கழுகுப் பாதுகாப்புக் குழு அமைக் கப்பட்டு உள்ளது.  தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேர ளாவில் ஒவ்வொரு ஆண்டும் கழுகுகள்  குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத் திலும் வெவ்வேறு காலங்களில் கழுகு கள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறுகிறது. இதனால் பாறு கழுகுகள் குறித்து இதுவரை, தோராயமான மதிப் பீடுகள் மட்டுமே உள்ளன. மேலும் 3  மாநிலங்களில் பாறு கழுகுகளின் எண் ணிக்கை குறைந்து வருவதாக கூறப் படுகிறது. இந்நிலையில் 3 மாநிலங்களிலும் ஒருங்கிணைந்து கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு சனியன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து, இரு  வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த  முத்தரப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத் தில், இரட்டை கணக்கெடுப்பை தவிர்க்க, மேற்குத் தொடர்ச்சி மலையில்  முதல் முறையாக ஒருங்கிணைக்கப் பட்ட கழுகு கணக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதி காரிகள் கூறுகையில், 4 வகையான கழுகுகள் தென்னிந்தியாவில் காணப் படுகின்றன. மேலும் அவை நீலகிரி  உயிர்க்கோளப் பகுதியில் குவிந் துள்ளன. முதுமலை புலிகள் காப்ப கத்தின் சீகூர் பீடபூமியானது கடைசி யாக எஞ்சியிருக்கும் வெள்ளை குழல்  கழுகுகளை அடையாளம் காட்டும் பகுதியாக உள்ளது. இதுவரை நடந்த  கணக்கெடுப்புகளில் 200க்கும் குறை வாகவே கழுகுகள் இருப்பது தெரிய வந்தது. இந்த கணக்கெடுப்பு மூலம் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ் விடத்தை இன்னும் துல்லியமாக மதிப் பிட உதவும்.  பறவை இனங்கள் அடிக்கடி காணப்படும் நிலப்பரப்பை 10 இடங்களாகப் பிரித்து நடத்தப் படும். ஒவ்வொரு இடமும் ஒரு கழுகு  நிபுணர், ஒரு வன அதிகாரி, இரண்டு  தன்னார்வலர்கள் மற்றும் ஒரு வனக்  கண்காணிப்பாளர் அடங்கிய 5 பேர்  கொண்ட குழுவால் கண்காணிக்கப் படும். தமிழகத்தில் நீலகிரி மற்றும் ஈரோட்டில் மட்டும் நடக்கிறது. முது மலையில் 35 இடங்களில் கணக் கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் கூறினர்.