நாமக்கல், டிச.15- பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யா மல் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமார பாளையத்தில் 200க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. சாய ஆலைகளின் உரிமையாளர்கள் சிலர் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக சாக் கடை கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலந்து விடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், அண்மையில் பள்ளிபாளையம், குமாரபாளையத்தைச் சேர்ந்த சாய ஆலை உரிமையாள ருடன் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய சிறப்பு கூட் டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வருவாய் கோட்டாட்சியர், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீரை கலக்கும் சாயசாலை உரிமையா ளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச் சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சனியன்று பள்ளி பாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே ஓடும் பிரதான சாக் கடை கால்வாயில் வழக்கத்தை காட்டிலும், அதிகளவு வெள்ளை நிற நுரையுடன் சாயக்கழிவுநீர் காவிரி ஆற்றில் கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.