districts

img

சாலை வசதி இல்லாததால் உடல் நலம் குன்றியவரை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம்

உடுமலை, ஆக.30 - உடுமலை அருகே உள்ள மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான  ஈசல்திட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெள் ளியன்று மலைப்பகுதியிலிருந்து தொட்டில் கட்டி தூக்கி வந்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது. உடுமலை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 18 மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.  இந்த குடியிருப்புகளுக்கு செல்ல மலை  அடிவார பகுதியிலிருந்து காட்டுப்பகு தியில் உள்ள ஒற்றை அடி பாதையில் நடந்து தான் செல்ல வேண்டும். இப்ப குதி மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம் உள் ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இந்த  வழியை நம்பியே உள்ளனர்.  இந்நிலையில், கடந்த வருடம் மலை வாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு சாலை அமைத்து தரக்கோரி தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் தலைமை யில், உடுமலை வன அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம்  நடத்தினர். மழை வாழ் மக்களின் தொடர்  போராட்டத்தின் விளைவாக திருமூர்த்தி  மலைப்பகுதியான குருமலை பகுதிக்கு சாலை அமைப்பது என மாவட்ட ஆட்சி யர் தலைமையில் வனக்குழு தீர்மானம்  நிறைவேறியது.  இந்நிலையில், உடுமலை ஜல்லி பட்டி அருகே உள்ள மலைப்பகுதியான ஈசல்திட்டு பகுதியில் பாப்பாள் என்பவ ருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைய டுத்து, அவரை உடுமலை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக மலைப்பகு தியில் இருந்து காட்டு வழி பாதையில் தொட்டில் கட்டி சுமந்து வந்தனர். இது போன்ற துயரச் சம்பவங்கள் தொடராமல்  இருக்க அனைத்து மலைவாழ் குடியி ருப்புகளுக்கும் சாலை அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண் டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் தொடர்ந்து போராட்டங்கள்  நடத்தி வருகிறது.மலை அடிவாரப்ப குதியில் மக்கள் பயன்படுத்தும் வகை யில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத் துவமனை அமைக்க வேண்டும் என  மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்த னர்.