districts

img

ஒன்றிய அரசின் தாமதத்தால் விசைத்தறி தொழில் அழியும் நிலை

நாமக்கல், ஏப்.10- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க அனுமதி அளிக் காத, ஒன்றிய அரசின் தாமதத் தால் விசைத்தறி தொழில் அழியும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையத்தில் சிறு ஜவுளி உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் ஆலோச னைக் கூட்டம் சங்க அலுவல கத்தில் தலைவர் பிரபாகரன் தலை மையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பிரபாகரன் பேசுகையில், குமாரபாளையம் பகுதி ஜவுளி தொழில் நிறைந்து காணப்படும் பகுதியாகும். ஆனால், தற்போது தொழில் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஜவுளித்தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது. விசைத்தறி இயந் திரங்களை எடைக்கு போடக்கூ டிய நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளோம். கடந்த 10 ஆண் டுகளுக்கு முன்பு லட்சக்கணக் கான தறிகள் இருந்த நிலை  மாறி, தற்போது ஆயிரக்கணக் கான தறிகள் என சுருங்கி விட் டது. இதேநிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறிகளே இல்லாத நிலை  உருவாகும். இதற்கு பிரதான  காரணம் விசைத்தறி ஜவுளிக ளுக்கு சாயம் கொடுக்கக்கூடிய சிறிய அளவிலான சாயப்பட்டறை கள் இடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி ஜவுளிக ளுக்கு சாயம் போட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 2014 ஆம் ஆண்டி லேயே குமாரபாளையத்தையை உள்ளடக்கி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை பொது  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்ப டாத நிலையே உள்ளது. இது  மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப டுத்தி விசைத்தறி தொழிலா ளர்களையும், தொழிலையும் பின் னுக்கு தள்ளி உள்ளது. கடந்த  ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கார ணங்களால் கடன் பிரச்சனை, ஜவு ளிகள் தேக்கம், தொழில் முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் 500க் கும் மேற்பட்ட சிறு ஜவுளி உற்பத்தி யாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் ஜிஎஸ்டி,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ (MS ME) திட்டம் உள்ளிட்ட காரணங்க ளாலும் தொழில் நசிவை சந்தித்து வருகிறது. சேலம் மாவட்டம், இளம்பிள் ளையில் விசைத்தறி ஜவுளி உற் பத்தி நிறுத்தப்பட்டு, சேலைகளை வெளியே வாங்கி விற்கும் நிலை  உருவாகியுள்ளது. காட்டன் நூல்  உற்பத்தி செய்யக்கூடிய கோவை  மில் நூல் உற்பத்தியாளர்கள் தங் கள் ஆலைகளை மூடிவிட்டனர். இதே நிலை நீடித்தால் தமிழ்நாட் டில் நெசவுத்தொழிலே இல்லாத  நிலை உருவாகும். இதனிடையே, தமிழக அமைச்சர்கள் மெய்யநா தன், மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஒருங் கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டிய இடத்தை  நேரில் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரக் கோரி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை  செய்து மனு அனுப்பி உள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு இதற்கான ஏற்பாடுகள் செய்யாமல் காலம்  தாழ்த்தி வருகிறது. எனவே, ஈரோடு  நாடாளுமன்ற தொகுதியில் போட் டியிடும் வேட்பாளர்கள், ஒன்றிய அரசிடம் சொல்லி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்த வேண்டும். அவ்வாறு வலியுறுத்துவேன் என உறுதி அளிக்கும் வேட்பாளருக்கு ஜவுளி  உற்பத்தியாளர்கள் மற்றும்  சாயப்பட்டறை    தொழிற்வாலை உரி மையாளர்கள் அனைவரும் ஆத ரவு அளிக்க தயாராக உள் ளோம். இவ்வாறு அவர் தெரி வித்தார். கடந்த 10 ஆண்டுகால மக்கள்  விரோத மோடி அரசின் ஆட்சியில் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவ னங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்த லில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதி ராக வலுவான குரல்கள் எழத்து வங்கியுள்ளது.