மக்களுக்கான மருந்து கொள்கைகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து விற்பனை, பிரதிநிதிகள் சங்கத்தினர் வெள்ளியன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரதீப், மாநில துணைச்செயலாளர் திலீப் மேனன், மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த், மாநிலக்குழு உறுப்பினர் சவுந்தராஜன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.